தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Uppur Veilugantha Vinayagar Aalayam

விநாயகர் சதுர்த்தி 2022: எப்பொழுதும் சூரிய ஒளி படும் விநாயகர்!

Aug 17, 2022, 08:35 PM IST

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஒவ்வொரு கிராமத்தில் உள்ளது வெயிலுக்கு உகந்த விநாயகர் கோயில். சூரியனின் வெளிச்ச ஒளி எப்பொழுதும் கோயிலில் உள்ள விநாயகர் சிலை ஈடுபடுவதால் இப்பெயர் வந்ததாகத் தல வரலாறு கூறுகின்றது.

சமீபத்திய புகைப்படம்

பிரிந்து போன ராகு சூரியன்.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. பணத்தின் மிதக்க போவது உங்கள் ராசியா?

May 03, 2024 10:53 AM

குருவிடம் மே மாதம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. உங்களை புரட்டி எடுக்கப் போகிறார்.. நீங்க என்ன ராசி என்று பாருங்க!

May 03, 2024 10:42 AM

Love Horoscope Today: திருமணமானவர்களுக்கு திருமண யோகம் கூடும்.. . இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் துளிர்விடலாம்!

May 03, 2024 08:24 AM

Today Horoscope: ‘மகிழ்ச்சியும் லாபமும் காத்திருக்கு.. உழைப்பு முக்கியம்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

May 03, 2024 06:26 AM

விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

May 02, 2024 02:48 PM

சனி கஷ்டப்படுத்த போகிறார்.. வக்ரத்தில் சிக்கிய 3 ராசிகள்.. 5 மாதம் விடமாட்டார்.. கும்பத்தில் சம்பவம்

May 02, 2024 02:17 PM

400 ஆண்டுகள் பழமை மாறா கோயிலான இக்கோயிலில் சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லும் வழியில் உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகர் ஆலயத்தில் யாகம் வளர்த்த ராமர், விநாயகருக்கும் சித்தி, புத்தி தேவியருக்கும் திருமணம் நடத்தி வைத்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே ஆண்டுதோறும் ஆவணி மாதம் இங்கு பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் நாள்தோறும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வடநாட்டில் நடப்பது போன்று தமிழகத்தில் விநாயக பெருமானுக்குச் சித்தி புத்தி இரு தேவிகளுடன் திருமணம் நடைபெறும் முதல் ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கின்றது.

திருவிழாவின் இறுதி நாளான சதுர்த்தி அன்று விநாயகர் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி பக்தர்களுக்குத் தீர்த்தவாரி வழங்குகின்றார். இதை முன்னிட்டு பக்தர்கள் காவடி மற்றும் தீமிதித்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

திருமண தோஷம், நினைத்த காரியம் நிறைவேறுதல், குடும்ப ஒற்றுமை, முன்னோர்கள் பகை உள்ளிட்ட பல்வேறு விதமான நேர்த்திகள் நிவர்த்தி ஆகுவதால் பொதுமக்களும், ஆன்மீக பக்தர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.