தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ரஃபேல் வாட்ச் ஓனர் சேரலாதன்’ பில்லை வெளியிட்டார் அண்ணாமலை

’ரஃபேல் வாட்ச் ஓனர் சேரலாதன்’ பில்லை வெளியிட்டார் அண்ணாமலை

Kathiravan V HT Tamil
Apr 14, 2023 10:42 AM IST

”27-5-2021ஆம் ஆண்டில் இருந்து என் கையில் இருக்கும் இந்த வாட்ச் தான். இந்த வாட்சை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளேன்”

திமுக அமைச்சர்கள் சொத்துப்பட்டியலை வெளியிடும் அண்ணாமலை - ரபேல் வாட்ச்
திமுக அமைச்சர்கள் சொத்துப்பட்டியலை வெளியிடும் அண்ணாமலை - ரபேல் வாட்ச்

ட்ரெண்டிங் செய்திகள்

பிரஞ்சு நிறுவனம் தயாரித்த ரஃபேல் வாட்ச் உலகத்தில் 500 வாட்ச்கள் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இரண்டு வாட்ச்கள் மட்டும்தான் விற்றுள்ளது. ஒரு வாட்ச் மும்பையில் பெரிய எம்.என்.சி நிறுவனத்தில் இருக்கும் ஒருவர் கட்டி இருக்கிறார்.

அடுத்த வாட்ச் கோவையில் ஜிம்சன் என்ற வாட்ச் கம்பெனியில் இரண்டாவது வாட்ச் விற்கப்பட்டுள்ளது. நான் இந்த வாட்சை மே மாதம் 27ஆம் தேதி வாங்கினேன். இந்த வாட்சை வாங்க நினைத்தால் அது இந்தியாவில் சந்தையில் இல்லை.

இந்த வாட்சை வாங்கியது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரிஜினல் ஓனர் சேரலாதன் ராமக்கிருஷ்ணன் எனும் நண்பர். இந்த வாட்ச் எனக்கு மே மாதத்தில் ரபேல் வாட்ச் இருக்கிறது என்று கேள்விப்பட்ட உடன் அந்த வாட்சை கொடுப்பதற்கு சேரலாதன் ராமக்கிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நான் வாட்ச் வாங்கியதற்கான ரசீது இங்கு உள்ளது.

இந்த வாட்ச் மார்ச் மாதத்திற்கு பிறகு எங்கும் விற்கப்படவில்லை, இதற்கான சீரியல் நெம்பர் இந்த பில்லில் உள்ளது. சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரை எனக்கு இரண்டு வருடமாக தெரியும். 27-5-2021ஆம் ஆண்டில் இருந்து என் கையில் இருக்கும் இந்த வாட்ச் தான். இந்த வாட்சை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளேன்.

IPL_Entry_Point