BJP: ’பாம் வேலு முதல் படப்பை குணா வரை!’ பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை வெளியிட்டார் காயத்ரி ரகுராம்!
”இது போக 100 க்கும் மேற்பட்ட பொடி ரவுடிகள் சேர்ந்துள்ளனர் என காயத்ரி ரகுராம் ட்வீட்”
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் தமிழக பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியலை பாஜக முன்னாள் நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழக பாஜகவில் ஆக்டிவாக வலம் வந்த நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவர் தன்னை ஓரம் கட்டுவதாக குற்றச்சாட்டு வைத்தார். பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகுவதாக அறிவித்த நிலையில் ”சிவப்பு கம்பள வரவேற்புக்காக அனைத்து தலைவர்களுக்கும் ஆரத்தி செய்யவும், பூக்களை வீசவும் பெண் பணியாளர்கள் பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் இது பாஜகவுக்கு பெண்கள் அதிகாரம்.
33% பெண்கள் இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த முடியாது. துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்டுகளாக எங்கள் பாஜக தேசிய/மாநில கட்சிக்காக மற்றும் நாங்கள் பணியாற்றிய தொகுதிக்கு (நம் நாட்டுக்காக) எங்கள் சேவை, அர்ப்பணிப்பு எங்கள் சொந்தக் கட்சியினரால் இழிவாக பார்க்கப்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
கடின உழைப்பாளிகளுக்கு பாஜக கட்சிக்கு தகுதி இல்லை. ரவுடிகள், பண மோசடி செய்பவர்கள், ஜால்ட்ராகள், பொம்பள பொரிக்கிகள், சட்டவிரோத போதை பொருள் விற்பனையாளர்கள், நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்கள், மனைவியை விவாகரத்து செய்யும், அல்லது மனைவியை கொன்றவர்கள், பெண்களை மேலும் கீழும் பார்க்க செய்பவர்கள் மட்டுமே அவர்கள் கட்சி பதவியில் மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்து இருப்பார்கள்” என காயத்ரி ரகுராம் ட்வீட் செய்து இருந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,
Source:- அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல்..
1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2.கல்வெட்டு ரவி - 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
3. புதுவை எழிலரசி - புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
4. சீர்காழி சத்தியா - மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
5. சேலம் முரளி
6. நெற்குன்றம் சூர்யா
7. புதுவை சோழன்
8. புதுவை விக்கி
9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
10. பாம் வேலு
11. குரங்கு ஆனந்த்
12. குடவாசல் அருண்
13. சீர்காழி ஆனந்த்.
14. சென்னை பாலாஜி
15. குடந்தை அரசன்
16. தஞ்சை பாம் பாலாஜி
17. ஸ்பீடு பாலாஜி
18. அரியமங்கலம் ஜாகீர்
19. தஞ்சை பாக்கெட் ராஜா
20. குடவாசல் சீனு
21. மயிலாடுதுறை அகோரம்
22. நெடுங்குன்றம் சூர்யா (சேர்ந்த உடன் பட்டியலின் மாநில செயலாளர் பதவி)
23. விஜயலட்சுமி (கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
24. படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி.. கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி அணி செயலாளர் பொறுப்பு)
இது போக 100 க்கும் மேற்பட்ட பொடி ரவுடிகள் சேர்ந்துள்ளனர். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஐபிஸ் என உருட்டிக்கொள்ளும் டுபாக்கூர் என பதிவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்