’மீண்டும் மக்கள் மனதில் முதல்வர் இடம்பிடிப்பார்!’ நடிகர் யோகிபாபு
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற கண்காட்சியை நடிகர் ரஜினி காந்த் உடன் பார்வையிட்ட நடிகர் யோகி பாபு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பட துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இளம் வயது முதல் முதலமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வரையில் பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் இந்த புகைப்பட காட்சியை பார்த்து வரும் நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
இன்றைய தினம் நடிகர் ரஜினி காந்த் கண்காட்சியை பார்வையிட்ட நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வீட்டு வீசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோருடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு பார்வைட்டார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ”தலைவரோட 70 வருஷ வாழ்கை அனுபவம் எல்லாத்தையும் பார்த்தோம். ரொம்ப கடினமான ஒரு வாழ்க்கையை அனுபவித்து வந்து இருக்கிறார். இவ்வுளவு பெரிய இடத்திற்கு சி.எம்.ஆக வந்தது அவரின் 70 வருட போராட்டங்கள் இந்த வண்ணங்களில் தெரிந்தது மேலும் மேலும் அடுத்தடுத்து நமக்கு நல்லது செய்து இருக்கிறார். மீண்டும் மீண்டும் தமிழக மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பார்.”