5 நிமிடத்தில் 100 பேரால் 100 வகையான உணவுகள் சமையல்...நோபல் சாதனை படைப்பு
Noble World Record: அடுப்பு இல்லாமல் வெறும் 5 நிமிடங்களில் 100 பேர் 100 வகையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தயார் செய்து நோபல் உலக சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. ஆரோக்கியமான இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் போன்றவற்றை இன்றைய தலைமுறையினரிடம் சேர்க்கும் விதமாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில், சுமாா் 5 நிமிடம் 13 விநாடிகளில் 100 பேர் 100 வித்தியாசமான இயற்கையான முறையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அடுப்பு இல்லாமல் செய்து முடித்தனர். இதனை நோபல் உலக சாதனை குழுவினர்கள் நடுவர்களாக இருந்து உறுதி செய்தனர். இதையடுத்து இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் விருதுநகா், மதுரை, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோந்த 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞா்கள் பங்கேற்றனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சமூக ஆா்வலா் சரண்யா செய்திருந்தனர்.
ஆண்டுதோறும் உலக அளவில் நிகழ்த்தப்படும் பல்வேறு சாதனைகள் இந்தியா மற்றும் மொரிசயசில் வெளியாகும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான சாதனையில் இந்த ஆரோக்கிய சமையல் இடம்பெறவுள்ளது.