தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கோவா நெடுஞ்சாலையில் லாரியுடன் கார் மோதி விபத்து-குழந்தை உள்பட 9 பேர் பலி

கோவா நெடுஞ்சாலையில் லாரியுடன் கார் மோதி விபத்து-குழந்தை உள்பட 9 பேர் பலி

Manigandan K T HT Tamil
Jan 19, 2023 12:44 PM IST

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் ஒன்று டிரக் மீது இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

லாரியில் நேருக்கு நேர் மோதி அப்பளம் போல் நொறுங்கியுள்ள கார்
லாரியில் நேருக்கு நேர் மோதி அப்பளம் போல் நொறுங்கியுள்ள கார்

ட்ரெண்டிங் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள மங்கான் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஒரு குழந்தை, 5 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் உறவினர்கள். ரத்னகிரி மாவட்டம் குஹாகர் நகரில் உள்ள ஹெட்வி கிராமத்தில் வசிப்பவர்கள். கார் குஹாகர் நோக்கியும், லாரி மும்பை நோக்கியும் சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியிலும் சேதம் ஏற்பட்டது அங்கிருந்து வீடியோவில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சீராகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்