Premalatha Vijayakanth: ’திமுகவினர் அனைவரும் கஞ்சா கடத்தும் ரவுடிகள்!’ ஈபிஎஸ் முன் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!
”அண்ணன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆன பிறகு அம்மா இல்லாமல் அவர் சந்திக்கும் முதல் தேர்தல், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நான் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை சாதித்துக் காட்டுவோம்”

திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
திருச்சியில் நடைபெறும் அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
இன்றைக்கு நடப்பது பொதுக்கூட்டமா? அல்லது மாநாடா என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் மாநாடு உள்ளது. திருச்சி என்றாலே திருப்புமுனைகளை ஏற்படுத்த கூடிய மாவட்டமாக உள்ளது. திருச்சியில் தேமுதிக மகளிர் மாநாடு நடந்த போது மலைக்கோட்டை மஞ்சள் கோட்டையாக மாறியது.