தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Annamalai: ’19 தொகுதிகளில் பாஜக போட்டி! ஆனால் ஒரு தொகுதியில்தான் கவனம்!’ அண்ணாமலையை மறைமுகமாக சாடும் மாரிதாஸ்!

Annamalai: ’19 தொகுதிகளில் பாஜக போட்டி! ஆனால் ஒரு தொகுதியில்தான் கவனம்!’ அண்ணாமலையை மறைமுகமாக சாடும் மாரிதாஸ்!

Kathiravan V HT Tamil
Apr 06, 2024 06:32 PM IST

”ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் முக்கியம்!" என்ற ரீதியில் promotion செல்வது, அந்த ஒரு தொகுதிக்கு மட்டுமே அதீத முக்கியதுவம் கொடுப்பது திமுகவில் உதயநிதிக்கு கூட நடக்காது ஒன்று!”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தமிழக தேர்தல் களத்தில் பாஜக!

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் தனியாக கூட்டணிகளை அமைத்து போட்டியிடுகிறது. 

கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன், மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வம், வட சென்னை தொகுதியில் வழக்கறிஞர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதியில் பொன்.பாலகணபதி, திருப்பூர் தொகுதியில் ஏபி முருகானந்தம், நெல்லை தொகுதியில் நைனார் நாகேந்திரன், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயினி, நீலகிரி தொகுதியில் எல்.முருகன், நாமக்கல் தொகுதியில் கேபி.ராமலிங்கம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக நேரடியாக 19 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தாமரை சின்னத்தில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த ஏசி சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில் தமிழக பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், கவனிக்க தக்கது: தமிழகத்தில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

சரிதானே! (சின்னம் 23)! "ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் முக்கியம்!" என்ற ரீதியில் promotion செல்வது , அந்த ஒரு தொகுதிக்கு மட்டுமே அதீத முக்கியதுவம் கொடுப்பது திமுகவில் உதயநிதிக்கு கூட நடக்காது ஒன்று!

பொன்னார் , நயினார் போன்ற தலைவர்கள் தங்கள் அரசியல் அனுபவத்தில் வேலை செய்ய மற்ற அனைத்து வேட்பாளர்கள் நிலை மந்தமாக இருப்பது மத்திய தலைமை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விசயம் என மாரிதாஸ் கூறி உள்ளார். 

பாஜக ஆதரவாளரான மாரிதாஸே தமிழக பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ளது சமூகவலைத்தளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. மாரிதாஸின் இந்த ட்வீட்டுக்கு பாஜகவை சேர்ந்த பலர் கமெண்ட் செக்‌ஷனில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தமிழகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கட்சிக்காவும், கூட்டணிக்காகவும் பரப்புரை மேற்கொள்வதாகவும், இது போன்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். 

WhatsApp channel