தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rahul Gandhi Whips Himself: தன்னை தானே சாட்டையால் தாக்கி கொண்ட ராகுல் காந்தி

Rahul Gandhi whips himself: தன்னை தானே சாட்டையால் தாக்கி கொண்ட ராகுல் காந்தி

Nov 03, 2022, 11:57 PM IST

'பாரத் ஜோடோ' என்ற பெயரில் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தற்போது தெலங்கானாவில் உள்ளார். இந்த நிகழ்வின்போது ராகுல்காந்த் சாட்டையால் தன்னை தானே அடித்துக்கொள்ளும் விடியோ ஒன்று வைரலாக வருகிறது. போனலு திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இதை மேற்கொண்டுள்ள நிலையில், தன்னைதானே பல முறை சாட்டையால் அடித்துக்கொண்டார். இந்த ஒற்றுமை நடைபயணத்தின்போது குழந்தைகளுடன் கராத்தே, பாரம்பரிய நடனமான திம்சா நடனம் போன்றவற்றிலும் ராகுல் காந்தி ஈடுபட்டார். இந்த ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் நாள்தோறும் ஊடகத்தின் மூலம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வரும் ராகுல் காந்தி, தற்போது பாதையாத்திரைக்கு இடையே தெலங்கானாவில் மக்கள் தன்னை சூழ்ந்து இருக்க சாட்டையால் தாக்கிகொண்டுள்ளார். இதைப்பார்த்து அங்கு குழுமியிருந்தவர்களும் பலமாக கூச்சலிட்டனர். இந்த பாதையாத்திரை நிகழ்வுகளுக்கு இடையே உள்ளுர் திருவிழாக்கள், சடங்குகளிலும் தவறாமல் பங்கேற்கிறார். திம்சா நடன கலைஞர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனத்தை ஆடி கவனம் பெற்றார். இந்த நடைபயணத்தை அவர் தொடங்கி 57 நாள்களை ஆகியுள்ள நிலையில், 12 மாநிலங்களை கடந்த ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. மொத்த நடைப்பயணமாக 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாள்களில் மேற்கொள்ளவுள்ளார்.