Viral Video: சீறிவந்த பாம்பு - நொடி பொழுதில் மகனை காப்பாற்றிய தாய்
Aug 14, 2022, 03:15 PM IST
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் ராட்சத நாகப்பாம்பு இருந்துள்ளது. அப்போது அந்த வீட்டில் இருந்து தாயும் மகனும் வெளியே வந்துள்ளனர். பாம்பு ஊர்ந்து வருவதை கவனிக்காமல் இரண்டு அடி சென்ற சிறுவன் பின்னர் பாம்பு இருப்பதை கண்டு பயந்து விடுகிறான். பாம்பும் படமெடுத்தபடி தலையை தூக்கி சிறுவனை தீண்ட வருகிறது. இதை கவனித்த தாயார் நொடி பொழுதில் லாவகமாக மகனை தூக்கி பாம்பிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். பாம்பும் ஏதும் செய்யமால் நகர்ந்து சென்று விடுகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.