தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Police Arrested 5 People For Burning Statue Of Seeman

Seeman : சர்ச்சை கருத்து.. சீமான் உருவ பொம்மை எரிப்பு - மதுரையில் 5 பேர் கைது!

Divya Sekar HT Tamil

Feb 20, 2023, 02:42 PM IST

மதுரையில் சீமான் உருவ பொம்மை எரித்த தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் சீமான் உருவ பொம்மை எரித்த தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் சீமான் உருவ பொம்மை எரித்த தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அருந்ததியர் சமூகத்தை பற்றி ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சை கூறிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கண்டித்து அவரது உருவ பொம்மியை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

Weather Update: மக்களே உஷார்.. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்…வானிலை மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. தங்கம் சவரனுக்கு 920 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

இதனை தொடர்ந்து உடனடியாக தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று தீயை அணைத்தனர். தீயினை அணைத்த போலீசார் தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இதேபோல் ஆதித்தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்றம் எதிரே உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் முன்பு ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் திடீரென சீமானின் இரண்டு உருவ பொம்மைகளை எரித்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு சென்று தீயை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பட்டியலின மக்களை சீமான் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

இதேபோல் திராவிட தமிழர் கட்சி திருக்குமரன் தலைமையில், நிர்வாகிகள் வண்ணார்பேட்டையில் சீமான் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட நிதி செயலாளர் தமிழ்மணி தலைமையில், நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்