தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Plus 2 Student Commits Suicide By Jumping Into Pool After Mother Scolds Her

தென்காசியில் சோகம் : தாய் கண்டித்தால் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Aug 16, 2022, 09:24 AM IST

செங்ககோட்டை அருகே தாய் கண்டித்தால் பிளஸ் 2 மாணவி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்ககோட்டை அருகே தாய் கண்டித்தால் பிளஸ் 2 மாணவி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்ககோட்டை அருகே தாய் கண்டித்தால் பிளஸ் 2 மாணவி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி : செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் கற்பகவல்லி (17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கற்பகவல்லி படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

Weather Update: மக்களே உஷார்.. இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்…வானிலை மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. தங்கம் சவரனுக்கு 920 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

இதுதொடர்பாக அவரை தாய் கண்டித்து, படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்திவுள்ளார். இதில் மனமுடைந்த கற்பகவல்லி பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். அப்போது, அங்குள்ள பெரிய குளத்தில் கற்பகவல்லி குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அச்சன்புதூர் போலீசார், கற்பகவல்லியின் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்