EPS Announcement: அதிமுகவில் நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - இபிஎஸ் அறிவிப்பு
May 08, 2023, 01:43 PM IST
EPS Announcement: மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000 ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதியுதவி வழங்கும் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டையும், இந்த ஆண்டையும் சேர்த்து அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும்; போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000 ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படும். இவர்களுக்கான நிதியுதவி வரும் மே 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்