தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps:‘’பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக தலைவரே'' - சூதாட்டப் பணத்தை நன்கொடையாக பெற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஈபிஎஸ்!

EPS:‘’பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக தலைவரே'' - சூதாட்டப் பணத்தை நன்கொடையாக பெற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஈபிஎஸ்!

Marimuthu M HT Tamil

Mar 17, 2024, 07:49 PM IST

Edappadi Palanisami Condemned: நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Edappadi Palanisami Condemned: நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Edappadi Palanisami Condemned: நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Edappadi Palanisami Condemned: தேர்தல் பத்திர நன்கொடை மூலம், திமுக ரூ.656.5 கோடி பெற்ற நிலையில், லாட்டரி மார்ட்டினின் நிறுவனமான ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் திமுக அறக்கட்டளைக்கு ரூ.509 கோடி வழங்கி உள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கி உள்ளனர் என்ற தகவலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை சீலிடப்பட்ட உறைகளில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. பின்னர் தரவை பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. புதிய விவரங்களின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ .656.5 கோடியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதில் பிரபல லாட்டரி நிறுவனரான சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம், அதிகபட்ச நிதியாக ரூ.509 கோடியை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திர வெளிப்பாடுகளிலிருந்து முக்கிய தரவுகள் இங்கே:

  • தரவுகளின்படி, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து நன்கொடையாக ரூ .509 கோடியைப் பெற்றது.
  • தங்களுக்கு நன்கொடை அளிப்பவர்களின் அடையாளத்தை வெளியிட்ட சில அரசியல் கட்சிகளில் திமுகவும் ஒன்று. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சிக்கு ரூ.105 கோடியும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ.14 கோடியும், சன் டிவி ரூ.100 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளன.
  • காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ .1,334.35 கோடியைப் பெற்றுள்ளது. பாஜக ரூ.6,986.5 கோடி நன்கொடை பெற்றிருக்கிறது. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ரூ .2555 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பணமாக்கியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ .442.8 கோடியையும், தெலுங்கு தேசம் ரூ .181.35 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பணமாக்கியது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் நன்கொடை பெறும் இரண்டாவது பெரிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. அந்த கட்சிக்கு ரூ.1397 கோடி கிடைத்துள்ளது.
  • சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி பாஜக, திரிணாமுல் மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய தொகையை பெற்ற கட்சியாக அறியப்படுகிறது. அவர்கள் ரூ .1322 கோடி மதிப்புள்ள பத்திரங்களை ரொக்கமாக மாற்றியுள்ளது.
  • சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.14.05 கோடி சம்பாதித்தது தெரியவந்துள்ளது. அகாலிதளம் ரூ.7.26 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும், தேசிய மாநாட்டுக் கட்சி ரூ.50 லட்சமும் தேர்தல் பத்திர நிதியாக பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • சிபிஐ (எம்), ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் ஆகியவை தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிதியையும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அரசியல் நன்கொடைகளை வழங்குவதற்காக தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதல் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டது.
  • "லாட்டரி கிங்" என்று பொதுவாக அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின் நடத்தும் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், மிகப்பெரிய நன்கொடையாளராக உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் 2019 முதல் 2024 வரை ரூ.1368 கோடி நன்கொடை அளித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், ‘’லாட்டரிச் சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக, திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்’’ என்றார். 

அடுத்த செய்தி