தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mukesh Ambani: முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Mukesh Ambani: முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Karthikeyan S HT Tamil

Aug 15, 2022, 05:01 PM IST

முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.
முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை தொலைபேசி எண்ணிற்கு இன்று காலை அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் தீவிரவாதி எனவும், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய இருப்பதாகவும் மிரட்டல் விடுத்திருக்கிறார். அடுத்தடுத்து 4 முறை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை சார்பில் டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை துணை ஆணையர் நிலோத்பால் கூறுகையில் திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில் தெற்கு மும்பை உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தெரியாத எண்ணில் இருந்து, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமனைக்கு 3-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இந்த அழைப்புகள் வடக்கு மும்பையில் உள்ள தஹிசார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை இல்லமான ‘ஆண்டிலியா’வுக்கு வெளியே 20 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய ஸ்கார்பியோ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வாகனத்தில் முகேஷ் அம்பானியை கொலை செய்யப்போவதாக மிரட்டல் கடிதம் ஒன்றும் கிடைத்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போது மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்