தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andhra Pradesh: ஆந்திராவில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலி

Andhra Pradesh: ஆந்திராவில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலி

Karthikeyan S HT Tamil

Aug 17, 2022, 04:40 PM IST

ஆந்திராவில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி: ஆந்திர மாநிலம் மின்னல் தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

ஆந்திராவின் எலுரு மாவட்டம் போகோல் கிராமத்தில் சிலர் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வேலைக்கு இடையே சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக வயலில் உள்ள கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு எலுருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறந்தவர்கள் கொண்டபாபு, ராஜீ, தர்மராஜீ, வேணு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் காக்கி நாடா மாவட்டம் அன்னைவரத்தில் இருந்து விவசாய வேலைக்காக வந்திருந்தனர். சடலங்கள் பிரதேச பரிசோதனைக்காக எலுருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்