தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Health: தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

Kids Health: தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

I Jayachandran HT Tamil

Mar 28, 2023, 05:57 PM IST

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

சின்ன குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்-

எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரைக் கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது.

1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்.

குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தையின் கண் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை பார்த்து புன்னகை செய்யுங்கள்.

குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

பெரிய குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…

வலியில் இருந்து மீள ஆழ்ந்த மூச்சு விடும்படி சொல்லி கொடுங்கள் பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். உண்மையை சொல்லி குழந்தையை தயார்படுத்துங்கள். அறையில் உள்ள பொருட்களைக் காண்பித்து குழந்தையின் கவனத்தை மாற்றுங்கள். அழும் குழந்தையை சமாதானம் செய்யுங்கள் குழந்தை பயப்படுகிறது எனத் திட்ட வேண்டாம். கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்.

தடுப்பூசி போட்ட பின்-

மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும். தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான். கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள்.

பொதுவான பின்விளைவுகள்

தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம். எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.

தடுப்பூசி போட்டவுடன் வரும் காய்ச்சலை கண்காணிக்க-

குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள். அக்குள் பகுதியில் தெர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தெர்மானிட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.

காய்ச்சலை குணப்படுத்த-

குறைவான காய்ச்சல் (37.4 - 38C)

லேசான ஆடையை அணிவியுங்கள். பெரும்பாலான துணிகளை நீக்கிவிடுங்கள். மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்க வையுங்கள். காற்றோட்டம் இருக்கட்டும். நீர்ச்சத்து உணவுகளைக் கொடுங்கள்.

காய்ச்சல் (38 - 38.9டிகிரி சென்டிகிரேடுக்கு மேல்), அதிக காய்ச்சல் (39 டிகிரி சென்டிகிரேடு அல்லது அதற்கு மேல்)

காய்ச்சலுக்கான மருந்துகளை, மருத்துவர் பரிந்துரைப்படி கொடுக்கவும். லேசான ஆடையை அணிவியுங்கள். பெரும்பாலான துணிகளை நீக்கிவிடுங்கள். மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்க வையுங்கள். காற்றோட்டம் இருக்கட்டும். நீர்ச்சத்து உணவுகளைக் கொடுங்கள். பெட்ஷீட் போர்த்த வேண்டாம்.

மிகவும் அரிதாக வரக்கூடிய பிரச்னை என்றால் மூச்சுவிடுவதில் சிரமம்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை ஏற்படலாம்.

அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்-

தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல் அதிகமான காய்ச்சலால் (39° சென்டிகிரேடு/102.2°ஃபாரன்ஹீட் அல்லது இதைவிட அதிகம்) பலவீனமாகுதல் தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது, சாப்பிடக்கூட எழுந்திருக்காத குழந்தை 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது, சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல், உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல், வயிறு வீக்கம், மலத்தில் ரத்தம் வருதல், அடிக்கடி வாந்தி எடுத்தல், 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல் அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகளாகும்.

உணவுகள்-

அரிசி கஞ்சி, சிறுதானிய கஞ்சி வகைகள் தாய்ப்பால் பழக்கூழ் கொடுத்தல் இளஞ்சூடான தண்ணீரில் தயாரித்த ஜூஸ் சூப் வகைகள் இட்லி, ஸ்டீம் தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற லேசான உணவுகள் ரசம் சாதம் தண்ணீர், ஜூஸ் எனத் திரவ உணவுகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

டாபிக்ஸ்