Tamil Latest News Updates: அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Mar 08, 2023, 05:33 PM IST
(08-03-2023) இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்!
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு! பாஜக பிரமுகருக்கு 163 நாட்கள் சிறை!
இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தின் போதே 163 நாட்களையும் சிறையில் கழித்துவிட்டதால் அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
”மீடியாவிலும் பத்திரிகையிலும் பேசி கட்சியை வளர்க்க முடியாது” அண்ணாமலைக்கு கடம்பூர் ராஜூ பதிலடி
’வாய்ச் சொல்லில் வீரனடி’ என்று பாரதியார் சொன்னதை போல் மீடியாவிலும், பத்திரிக்கையிலும் பேசி கட்சியை வளர்க்க முடியாது. அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்வது கானல் நீராகத்தான் முடியும்.
நாங்கள் இன்றைக்கும் பாஜக கூட்டணியில்தான் உள்ளோம். இந்த கூட்டணியை இறுதி செய்ய வேண்டியது அண்ணாமலை அல்ல; அண்ணாமலை போவாறு, நாளை வேறு தலைவர் பாஜகவுக்கு வருவது சகஜம்.ம், பத்திரிக்கையிலும் பேசி கட்சியை வளர்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
EPS Vs BJP: ’அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை’ செம்மலை பேச்சால் வெடித்தது சர்ச்சை!
பாஜகவும், அதிமுகவும் சென்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்து போட்டியிட்டது என்பது உண்மைதான், ஆனால் அதற்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவர்களும் தனித்து நின்றார்கள்; நாங்களும் தனித்து நின்றோம். எனவே கூட்டணி தொடர்கிறது என்று வைத்துக் கொள்ளக்கூடாது. கூட்டணி என்று சொன்னாலே தேர்தலுக்கு முன்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பு தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவே தவிர; அதிமுக தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்வது சரியல்ல. அவ்வபொழுது ப்ரேக்கும் விடுகிறது.
EPS Vs BJP: மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி
நான் அம்மா போல ஒரு லீடர் என்று சொல்லாதீர்கள், அவரை போல் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உருவாக போவது கிடையாது. செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது, மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது.
கட்சிக்கூட்டணியில் ஒரு சில அபிலேஷைகள், உணர்ச்சிகல் எல்லாம் இருக்கும், அவற்றை கட்டுப்படுத்துவது தலைவர்களின் பண்பு, ஆனால் தலைவர்களே உணர்சிகளை தூண்டக்கூடாது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாணிக் சாஹா பதவியேற்பு
இரண்டாவது முறையாக திரிபுரா மாநிலத்தின் முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் சத்திய தேவ் நாராயண் ஆர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சிறந்த சேவையில் திருச்சி விமான நிலையம்
ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்த விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தரமான சேவை, பயணிகள் பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களில் அடிப்படையில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தகவல் தெரிவித்துள்ளார்
நகை திருட்டு
சென்னை அடையாறில் இருந்து ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பயணித்த சக்தி என்பவரிடம் இருந்து ரூ.20,000 மற்றும் 4 சவரன் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூடுலை மாற்றிய கூகுள்!
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது கூகுள்.
பைக் ரேஸ் - 4 பேர் கைது
சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட ராகுல், கிருஷ்ண வம்சி, அஜய், லோகேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் மன்னிப்பு
தமிழகத்தில் வட மாநில தொழிலாளா்களை தாக்குவதாக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக ஜாா்க்கண்ட் மாநில தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.