தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அம்மனாக மாறிய அமுதா; அரண்டு போன கூட்டம்.. அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

அம்மனாக மாறிய அமுதா; அரண்டு போன கூட்டம்.. அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Mar 10, 2023, 02:14 PM IST

Amudhavum Annalakshmiyum: அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே
Amudhavum Annalakshmiyum: அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே

Amudhavum Annalakshmiyum: அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோயிலில் நடக்கும் பூஜையில் பூசாரி மாலையை கையில் வைத்தபடி ஆக்ரோஷமாக உமா கழுத்தில் போடுகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் மீது சபதம்.. வெற்றி பெறுகிறார் எம்ஜிஆர்

Director Bala: ‘9 டு 9.. கால்கடுக்க காக்க நண்பன்.. குறுக்கே வந்த அஜித் பாலாவின் டஃப் டெஸ்ட்..தெறித்து ஓடிய இயக்குநர்!

Director Ameer: ‘அந்த குடும்பத்துல காய்கறி வித்தவனெல்லாம் என்ன.. சிவகுமார் வேடிக்கை பார்த்தாரு’ - இயக்குநர் அமீர்!

22 Years of Thulluvadho Illamai : விடலைப்பருவ மாற்றம்; தனுஷ்-செல்வாவுக்கு முகவரி! 22 ஆண்டுகளில் துள்ளுவதோ இளமை!

பூசாரி

தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய பூசாரி திருநீரை பூசி வாளை அமுதாவின் மீது வீசப்போக, பூசாரி கண்ணுக்கு அமுதா அம்மன் போல தெரிகிறாள்‌. இதனால் பூசாரி நிலைதடுமாறி சூலத்தின் மீது இடிக்க, குமரேசன் கையில் வாளால் கீறல் விழுகிறது. அதுமட்டுமல்லாமல் சூலத்தின் மீது இருந்த மாலை அமுதா கழுத்தில் விழுகிறது‌. எனவே இருவருக்கும் கருப்பன் வாக்கு கொடுத்து விட்டார் என ஊர்மக்கள் சொல்லி இருவரையும் விரதம் இருக்க சொல்கின்றனர். விரதத்தின் போது இருவரும் வீட்டிற்கு செல்லக் கூடாது என சொல்லி இருவருக்கும் காப்பு கட்டி விடுகின்றனர்.

இதனால் பூசாரியை உமாவும், பழனியும் காசை வாங்கிட்டு ஏமாத்திட்ட என திட்டுகின்றனர். மேலும் புவனாவை உமா & கோ ஒழுங்கா தாலியை கழட்டி கொடுத்துட்டு ஓடிப் போயிரு என மிரட்டுகிறார்கள். தொடர்ந்து புவனா என் அன்னமண்டிக்காக நான் தாலியை கழட்டி தந்துடுறேன் என கழட்டப் போக, அங்கு வரும் அமுதா புவனாவிடம் நீ பயப்படாத, எனக்கு எதுவும் ஆகாது அந்த கருப்பன் துணை இருக்கான் என சொல்லி உமா குடும்பத்தினரை திட்டுகிறாள்.

அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்

அடுத்து குமரேசன் தனது ஆட்களிடம் செல்வாவை குத்த சொல்ல அவரது ஆட்கள் குத்தப் போக, புவனா குறுக்கே விழுந்து தடுக்கிறாள். பிறகு செந்திலும் மாணிக்கமும் ரவுடிகளை அடித்து விரட்டுகின்றனர்;

மாணிக்கம், புவனாவிடம் செல்வா வேண்டாம்னு சொன்ன, இப்ப ஏன் காப்பாத்துன என கேட்க, புவனா தனக்கு செல்வா வேண்டும், ஆனால் அன்னமண்டி வாழ்க்கை என சொல்ல, அமுதா அவளிடம் உன் தாலியை நான் இறங்க விட மாட்டேன், என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன் என சொல்கிறாள்.

அம்மானாக மாறிய அமுதா

அதன் பிறகு அமுதா, உமா இருவரிடம் தீப்பந்தத்தை கொடுத்து, யாரு முதல்ல போய் மலைக்காளிக்கு விளக்கேத்திட்டு மெட்டியும் குங்குமம் எடுத்துட்டு வர்றாங்களோ அவங்க கேட்டதை தான் சாமி நிறைவேத்த சொல்றாருன்னு அர்த்தம் என ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். தொடர்ந்து இருவரும் தீப்பந்தத்துடன் காட்டுக்குள் செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.