PBKS vs RCB Innings Break: கோலி, பட்டிதார் மிரட்டல் அடி! மழை குறுக்கீடு மத்தியில் ஆர்சிபி ரன் மழை - பஞ்சாப்புக்கு சவால்
மழை குறுக்கீடு காரணமாக போட்டி சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. மழையால் பிட்ச் செயல்பாடு மாறிய நிலையில் அதன் நன்கு பயன்படுத்தி பஞ்சாப் பவுலர்களுக்கு எதிராக கோலி, பட்டிதார் ஆகியோர் மிரட்டல் அடியால் ஆர்சிபி அணி 241 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 58வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 7வது இடத்தில் இருந்து வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா ஆகியோருக்கு பதிலாக வித்வீத் கவீரப்பா, லயாம் லிவிங்ஸ்ட்ன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற முதல் மோதலில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி பஞ்சாப், ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் போட்டியாக உள்ளது.