தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manju Warrier: கிருஷ்ண பரமாத்மாவாக மாறிய மஞ்சுவாரியர்.. வைரலாகும் போட்டோஸ்!

Manju Warrier: கிருஷ்ண பரமாத்மாவாக மாறிய மஞ்சுவாரியர்.. வைரலாகும் போட்டோஸ்!

Jan 22, 2023, 01:16 PM IST

பிரபல நடிகையான மஞ்சுவாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த நாடகம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ( manju.warrier instagram )
பிரபல நடிகையான மஞ்சுவாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த நாடகம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையான மஞ்சுவாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த நாடகம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சுவாரியர் இந்தப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வரும் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Karthi Birthday: கார்த்தி பிறந்தநாள்; கரம்கோர்க்கப்போகும் ரசிகர்கள்;ரெடியாகும் ராஜீவ் காந்தி மருத்துவமனை- விபரம் உள்ளே!

Karthigai Deepam: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் அப்டேட்!

Star Movie: 'பகலிலும், மதியத்திலும் ஸ்டார் ஒளிர்கிறது' - இயக்குநர் இளன் நெகிழ்ச்சி!

Ranjithame Show: நம்ம கயல் ஜெயிச்சிட்டாங்க.. ரஞ்சிதமே வெற்றியாளரான சைத்ரா ரெட்டி!

ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்த இவரது நடிப்பு பல்வேறு தரப்பினரால் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தப்படத்தின் போது நடிகர் அஜித் செய்த பைக் பயணத்திலும் மஞ்சுவாரியர் பங்கெடுத்துக்கொண்டார். மேலும் துணிவு படத்தில் இடம் பெற்ற ‘காசேதான் கடவுளடா’ பாடலிலும் தனது குரலை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து துணிவு படத்தின் முதல்நாள் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த அவர், அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு தன்னுடைய நன்றியினையும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இவர் கிருஷ்ணர் வேடம் தரித்து நாடகத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நேற்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “ கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு மேடை நாடகத்தில் பங்கேற்பதை நினைக்கும் போது உற்சாக இருக்கிறது. குரு கீதாபத்மகுமார் அவர்களால் உருவாக்கப்பட்ட ராதே ஷ்யாம் மேடை நாடகத்தின் வாயிலாக சூரிய விழாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, நேற்றைய தினம் மாலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் ஏகேஜி சென்டரில் வைத்து இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

 

அந்த நாடகத்தில் மஞ்சுவாரியர் கிருஷ்ணர் வேடமிட்டு நடித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் தற்போது ராதே ஷ்யாம் என்ற கேப்சனோடு பகிர்ந்து இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி