தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gomathi Priya: ‘மிக அருகினில் இருந்து தூரமிது’ - கண்ணீர் வடித்த ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் கோமதி! - வீடியோ!

Gomathi Priya: ‘மிக அருகினில் இருந்து தூரமிது’ - கண்ணீர் வடித்த ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் கோமதி! - வீடியோ!

Mar 04, 2024, 07:59 AM IST

‘சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாடலிங் வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’ - கோமதி பிரியா!
‘சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாடலிங் வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’ - கோமதி பிரியா!

‘சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாடலிங் வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’ - கோமதி பிரியா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. முத்து - மீனா கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

300 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கோமதி பிரியா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அழுவது போன்ற வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வாமனன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘உன் அருகினில் இருந்தும் தூரமிது’ பாடலை பின்னணியில் ஒலிக்கச் செய்து, கண்ணீர் வடித்து அழுது கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இவர் கொடுத்த பேட்டியில், “ சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாடலிங் வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினேன். ஆனால் இரண்டையும் என்னால் ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை.

இதனையடுத்துதான் நான் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஆடிஷன் செல்லும் போது பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு நானே சோர்ந்து விடக்கூடாது பிரியா என்று சொல்லிக்கொள்வேன்.” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி