தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetharaman: முதல் நாளே பட்டைய கிளப்பும் லவ் ஸ்டோரி.. சீதாராமன்

Seetharaman: முதல் நாளே பட்டைய கிளப்பும் லவ் ஸ்டோரி.. சீதாராமன்

Aarthi V HT Tamil

Feb 20, 2023, 02:11 PM IST

சீதாராமன் சீரியலின் முதல் நாள் எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
சீதாராமன் சீரியலின் முதல் நாள் எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

சீதாராமன் சீரியலின் முதல் நாள் எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் திங்கள் டூ சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது புத்தம் புதிய சீரியலான சீதா ராமன்.

ட்ரெண்டிங் செய்திகள்

VijaySethupathi ACE Title Teaser: கிராபிக்ஸ், துப்பாக்கி, பைக் சேஸ்..! கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்கும் இந்த சீரியலின் முதல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இன்றைய எபிசோடில் குலசேகரபட்டினம் என்ற ஊரில் சீதா தனது குடும்பத்துடன் வாழ்ந்து வர தசரா பண்டிகைக்காக அவளது குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வருகின்றனர்.

மறுபக்கம் மகாலட்சுமி அறிமுகம் செய்யப்படுகிறாள். தன்னுடைய மகன் ராம்காக அழகான பெண்ணை பார்த்து இருக்க மகாலட்சுமியின் தொழில் எதிரி அந்தப் பெண்ணை கடத்தி விடுகிறான். அவர்களிடமிருந்து மகாலட்சுமி அந்தப் பெண்ணை மீட்டு அழைத்து வருகிறாள். இருப்பினும் இந்த பிரச்சனையில் ஏற்பட்ட சண்டையில் அந்த பெண்ணுக்கு லேசான காயும் ஏற்பட தன்னுடைய மகனுக்கு பார்க்கும் பெண்ணுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என சொல்லி அந்த பெண்ணை நிராகரிக்கிறாள்.

அடுத்து தசரா பண்டிகைக்காக தன்னுடைய சொந்த ஊரான குலசேகரபட்டினம் வரும் மகாலட்சுமி கோவில் திருவிழாவில் சீதாவின் அக்கா மதுமிதாவின் அழகை பார்த்து வியந்து தன்னுடைய மகனுக்கு இந்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறாள்.

அடுத்து ராம் கோவிலுக்கு வரும்போது சீதாவின் வண்டி ரிப்பேர் ஆகி நிற்க அவளுக்கு உதவி செய்கிறான். அப்போது ராம் குறித்து கேட்டறியும் சீதா அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விஷயத்தை அறிந்து இந்த கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நல்ல பெண்ணாக உங்களுக்கு கிடைப்பாள் என சொல்கிறாள்.

அடுத்து கோவிலுக்கு வரும் ராமும் சீதாவின் அக்கா மதுமிதாவின் அழகை பார்த்து மயங்குகிறான். பிறகு மதுமிதாவை சந்தித்து அவளிடம் பேச அவள் ராமிடம் ஒரு மாலையை கொடுத்து அனுப்புகிறாள்.

ராம் சீதா சொன்னது போலவே இந்த கோவிலில் வேண்டிக் கொண்டதும் அழகான பெண்ணை கண்டதால் சீதாவுக்கு நன்றி கூறி மதுமிதா கொடுத்த மாலையை அவளது கழுத்தில் போட்டுவிட்டு செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி