தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha Dress Change: திருமணத்தின்போது அணிந்த வெள்ளை கவுன்.. பிரிவுக்குப் பின் கருப்பாக்கிய சமந்தா - ஏன் இந்த கொலவெறி?

Samantha Dress Change: திருமணத்தின்போது அணிந்த வெள்ளை கவுன்.. பிரிவுக்குப் பின் கருப்பாக்கிய சமந்தா - ஏன் இந்த கொலவெறி?

Marimuthu M HT Tamil

Apr 26, 2024, 05:04 PM IST

Samantha Dress Change: சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சமந்தா, கருப்பு நிற பாடிஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். அது, 2017ஆம் ஆண்டில் தனது திருமணத்திற்காக அவர் அணிந்திருந்த வெள்ளை கவுன் என தற்போது தெரியவந்துள்ளது
Samantha Dress Change: சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சமந்தா, கருப்பு நிற பாடிஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். அது, 2017ஆம் ஆண்டில் தனது திருமணத்திற்காக அவர் அணிந்திருந்த வெள்ளை கவுன் என தற்போது தெரியவந்துள்ளது

Samantha Dress Change: சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சமந்தா, கருப்பு நிற பாடிஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். அது, 2017ஆம் ஆண்டில் தனது திருமணத்திற்காக அவர் அணிந்திருந்த வெள்ளை கவுன் என தற்போது தெரியவந்துள்ளது

Samantha Dress Change: திருமணத்தின் போது, நடிகை சமந்தா, தான் அணிந்திருந்த வெள்ளை கவுனை, விவாகரத்துக்குப் பின் கருப்புகவனாக மாற்றிய சம்பவம் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

Karthigai Deepam: ‘பக்கவாக காய் நகர்த்தும் ஐஸ்வர்யா.. கார்த்தியை தாரை வார்க்கும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகை சமந்தா ரூத் பிரபு. 2010ஆம் ஆண்டில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான, ‘’யே மாயா சேசாவே’’வில் ஜெஸ்ஸி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதேநேரம் தமிழில் இவர் ‘’பாணா காத்தாடி'' என்னும் படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின், தமிழில் மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், பெங்களூரு நாட்கள், தெறி, 24, மெர்சல், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், காத்துவாக்குல ரெண்டு காதல் எனப் பல்வேறு ஹிட் படங்களில் தமிழில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

சமந்தா ரூத் பிரபு திரையுலகில் அறிமுகமாகி 14 வருடங்கள் ஆகிறது. குறிப்பாக, ’’யே மாயா சேசாவே’’ என்ற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக நடிக்கும்போது, சக நடிகரான நாக சைதன்யாவுடன் நெருங்கிய நண்பர் ஆனார். பின் இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு,அக்டோபர் 6ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். ஒரு இந்து முறைப்படியும், ஒரு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. 

பின், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில், 2021ஆம் ஆண்டு மனம் ஒத்துப்பிரிவதாக அறிவித்தனர். இதில் நாகசைதன்யா தான், சமந்தாவை வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சமந்தா, மன அமைதிக்கு ஆன்மிக யாத்திரையாக ரிஷிகேஷ் வரை சென்றுவந்தார். இப்பிரிவு, சமந்தாவை மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதை அவரது ரசிகர்கள் உணர்ந்தனர்.

அப்போது தான் மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார், சமந்தா. பின் ஒரு வருட இடைவெளிக்குப் பின் உடல் நலம்பெற்று அண்மையில், அவர் சர்ப்ரைஸாக 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு, படிக்கட்டுகளில் ஏறிவந்து சுவாமி தரிசனம் செய்தார். பின், சாகுந்தலம், குஷி ஆகியப்படங்களில் நடித்துள்ளார்.

எல்லே விருதுவிழாவில் சமந்தா:

இந்நிலையில், எல்லே நிலைத்தன்மை விருதுகளில் ஏப்ரல் 25ஆம் தேதி கலந்து கொண்டபோது, சமந்தா ரூத் பிரபு அணிந்திருந்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  2017ஆம் ஆண்டு, தனது திருமணத்தின்போது அணிந்திருந்த வெள்ளை கவுனை, டிசைனரிடம் கொடுத்து கருப்பு நிற அழகிய கவுனாக மாற்றியமைத்துள்ளார் அவர். 

சமந்தாவின் திருமண கவுனை வடிவமைத்த டிசைனர் கிரேஷா பஜாஜ்,  அதனை விருதுவிழாவுக்காக எவ்வாறு மாற்றியமைத்தார் என்பது குறித்த ரீலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். 

அதில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, சமந்தா விருது விழாவில் பங்கேற்பதற்காக, வெள்ளை கவுனை, கருப்பு நிறத்தில் மாற்றி, நிழலுருவத்தை எவ்வாறு செய்தனர் என வீடியோ பதிவுசெய்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அதில் அந்த வடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் எழுதியதாவது, "எங்கள் அருங்காட்சியகமான சமந்தாவுடன் பணிபுரிவதை நாங்கள் விரும்பினோம். அவருக்கு ஒரு புதிய நினைவகத்தை உருவாக்கவும், மற்றொரு கதையைச் சொல்லவும் உதவினோம். அழகு எப்போதும் இருக்கும். அது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வடிவத்தை எடுக்கும்" என எழுதியிருந்தார். 

இந்த விருது விழாவில், நிலைத்தன்மை விருதை வென்ற சமந்தா, தனது மாற்றியமைக்கப்பட்ட கவுனில் எடுத்த படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

மேலும் இதுகுறித்த சமந்தா, "நாம் இனிமேல், நிலைத்தன்மையைப் புறக்கணிக்க முடியாது. அது ஒரு விருப்பத்தேர்வாக, இருந்த கட்டத்தை நாங்கள் கடந்துவிட்டோம். நாம் வீடு என்று அழைக்கும் நமது கிரகத்தின் நீண்ட ஆயுளுக்கு இது இப்போது அவசியம். இன்று நான் அணிந்திருக்கும் உடை மிகவும் திறமையான, கிரேஷா பஜாஜால், மறுவடிவமைப்பு செய்த ஒரு பிரியமான கவுன் ஆகும்.

அது முக்கியமற்றதாகத் தோன்றினாலும்.. எனது பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்துவது, எனது பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கும் எனது வாழ்க்கை முறையை மிகவும் நிலையானதாக மாற்றுவதற்கும் நான் எடுக்கும் பல படிகளில் ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு சிறிய செயல்களையும், ஒவ்வொரு சிறிய தீர்க்கமான நடவடிக்கையும் முக்கியமானது. உங்கள் அனைவரையும் இதுபோன்ற சிறிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’எனப் பதிவிட்டுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி