தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பார்சிலோனா வீதிகளில் கணவர் விக்கியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன்தாரா!

பார்சிலோனா வீதிகளில் கணவர் விக்கியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன்தாரா!

Aug 15, 2022, 10:55 PM IST

இந்திய தேசிய கொடியுடன் கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோன வீதிகளில் உலா வந்து 75வது சுதந்திர தின ஆண்டுவிழாவை கொண்டாடியுள்ளார் நடிகை நயன்தாரா.
இந்திய தேசிய கொடியுடன் கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோன வீதிகளில் உலா வந்து 75வது சுதந்திர தின ஆண்டுவிழாவை கொண்டாடியுள்ளார் நடிகை நயன்தாரா.

இந்திய தேசிய கொடியுடன் கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோன வீதிகளில் உலா வந்து 75வது சுதந்திர தின ஆண்டுவிழாவை கொண்டாடியுள்ளார் நடிகை நயன்தாரா.

விடுமுறையை கொண்டாட பார்சிலோனா சென்றுள்ளனர் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன். வழக்கம் போல் தங்களது ஹேப்பி மொமண்ட்களை கிளிக்கி தள்ளி இருவரும் அந்த புகைப்படங்களையும் தவறாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vishal in Annamalai Biopic: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா விஷால்? வெளியான தகவல்

Karthigai Deepam: உப்பின் மீது முட்டி போட வைத்து சித்ரவதை.. வறுத்தெடுக்கும் தீபா.. வதங்கி தவிக்கும் ரியா!

Aranmanai 4 Twitter Review: மிரட்டும் பேய்.. மயக்கும் தமன்னா.. அரண்மனை 4 நம்பி போலாமா? - விமர்சனம் இங்கே!

Actor Kavin: விஜய் மகன் படத்தில் நானா ?.. ‘ஆமா மீட்டிங் நடந்தது உண்மைதான் ஆனா’ - கவின் ஓப்பன் டாக்!

தனி விமானத்தில் பயணத்தை தொடங்கிய மூலம், பார்சிலோனாவில் இறங்கி ஜாலியாக டைம் பாஸ் செய்தது முதல் அத்தனை ரொமன்டிக் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை ஹார்ட் எமோஜிக்களை பெற்றனர். குறிப்பாக பிளாக் ஸ்லீவ்லெஸ் டாப்பில், கழுத்தி பளபளக்கும் மஞ்சள் தாலியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் ஒன்று லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வைரலானது.

இதையடுத்து நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை இந்த ஸ்டார் தம்பதியினர் பார்சிலோனா வீதிகளில் வைத்து கொண்டாடியுள்ளனர். இந்திய நாட்டு தேசிய கொடியை இருபுறங்களையும் நயன்-விக்கி ஜோடி ஒருவருக்கொருவர் கையில் பிடித்தவாறு கொடியை பறக்கவிட்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடியோவை நயன்தாரா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்கான பேக்கிரவுண்ட் மியூசிக்காக ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை இணைத்துள்ளார்.

இதுதவிர பார்சிலோனாவின் முக்கிய பகுதிகளில் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தேசிய கொடியை ஏந்தியாவாறும் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார் நயன்தார். பின்னர் ஷுட்டிங்கில் பங்கேற்பதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சில நாள்களிலேயே இந்தியா திரும்பினர்.

தற்போது இருவரும் தங்களது பணியை முடித்துவிட்ட நிலையில் விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு சென்றுள்ளனர்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.