தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yash Chopra: இந்திய திரை இயக்குனர் யாஷ் சோப்ரா வரலாறு – ஆவண- சீரிஸ் எப்போது?

Yash Chopra: இந்திய திரை இயக்குனர் யாஷ் சோப்ரா வரலாறு – ஆவண- சீரிஸ் எப்போது?

Priyadarshini R HT Tamil

Jan 31, 2023, 01:36 PM IST

Netflix Announces: இந்திய திரைப்பட இயக்குனர் யாஷ் சோப்ராவின் வாழ்க்கையை மையமானக்கொண்ட ஆவண-சீரிசை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
Netflix Announces: இந்திய திரைப்பட இயக்குனர் யாஷ் சோப்ராவின் வாழ்க்கையை மையமானக்கொண்ட ஆவண-சீரிசை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

Netflix Announces: இந்திய திரைப்பட இயக்குனர் யாஷ் சோப்ராவின் வாழ்க்கையை மையமானக்கொண்ட ஆவண-சீரிசை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய திரைப்பட இயக்குனர் யாஷ் சோப்ரா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகியவற்றை கொண்டாடும் வகையில்,  நான்கு பகுதிகளைக் கொண்டு எடுக்கப்படும் ஆவண- சீரீஸ் குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆவண சீரிசில் நட்சத்திர பட்டாளங்களுக்கு குறைவிருக்காது. இந்தி திரைத்துறையில் 35 முன்னணி திரைக்கலைஞர்கள் குறித்து பேசும். மேலும் யாஷ் ராஜ் பிலிம்சுடன் நெருக்கமாக பணிபுரிந்த இந்தியின் மெகா ஸ்டார்களும் அடகுவர். பாலிவுட்டின் வரலாறு, பாலிவுட் படங்களின் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்சின் தாக்கங்கள் என்ற லென்ஸ் வழியாக பாலிவுட் வரலாறு, அதன் முன்னணி நடிகர்கள் ஆகிய அனைத்தையும் ஆவணப்படுத்தும் என ரிலீஸ் செய்யும்போது கூறுப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

‘தி ரொமான்டிக்ஸ்‘ என்பதன் டிரைலர் புதன்கிழமை (நாளை) நெட்பிளிக்சில் வெளியிடப்படும். யாஷ் சோப்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல் காட்சி பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும். யாஷ் சோப்ரா, இந்தி திரை உலகின் குறிப்பிடும்படியான திரைப்படங்களான சில்சிலா, லம்ஹே, கபிகபி, வீர்ஷாரா, தில் டூ பகல் ஹை, சந்தி மற்றும் ஜப்தக்ஹைஜான் ஆகியவற்றை இயக்கியவர். 

‘தி ரொமான்டிக்ஸ்‘ ஆவண-சீரிசை ஸ்மிரிதி முந்த்ரா இயக்குகிறார். ‘இந்தியன் மேட்ச் மேக்கிங்‘ என்ற வெற்றிகரமான ஆவணப்பட இயக்குனர். 

“யாஷ் சோப்ராவை காதல் ரொமாண்டிக் படங்களின் மன்னன் என்றே கூறலாம். அவரது படங்கள், உணர்வுகள், தனித்தன்மை மற்றும் இந்தி சினிமாவில் கலாச்சார மாற்றம் என்று புதிய அலையை உருவாக்கியதுடன், இந்தி சினிமாத்துறையை இன்று இருக்கும் இடமான உலகின் தலைசிறந்த பெரிய திரைப்பட இன்டஸ்டிரிகளுள் ஒன்றாக மாற்ற உதவியது. அவரது பாடல்கள், கதைகள், நினைவுகள் ஆகிய அகைனத்தையும் கொண்டாடும் வகையில் நாங்கள் யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் ஸ்மிரிதி முந்த்ராவுடன் என்ற பெரும் படைப்பாற்றலின் ஜாம்பவான்களுடன் நாங்கள் கைகோர்கிறோம்“ என்று நெட்பிளிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத்தலைவர் மோனிகா ஷெர்கில் கூறினார். 

“இந்த ஆவணப்படம் யாஷ் சோப்ரா மற்றும் அவரது மகன் ஆதித்யா சோப்ரா ஆகியோரின் கதையாகும். அவர் இருவரும் உருவாக்கிய உலகத்தரமான ஸ்டுயோக்கள் மற்றும் அவர்களின் தயாரிப்பு குறித்து பேசும். பாலிவுட் திரை வரலாற்றின் ஒரு செல்வாக்கான குடும்பத்தின் வாழ்க்கைளை எங்கள் வாடிக்கையாளர் வாழ்ந்து பார்க்கும் அனுபவமாக ஆவணபடம் இருக்கும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது“ என்று அவர் மேலும் கூறினார்.           

யாஷ் ராஜ் பிலிம்ஸ், தற்போது பதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடி வருகிறது. ஷாருக்கான் மற்றுத் தீபிகா படுகோனே நடித்த அந்த திரைப்படம் ரிலீசான 5 நாளிலே ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது.  

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி