தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Allu Arjun: நான் ரசிகர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் - அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

Allu Arjun: நான் ரசிகர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் - அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

Mar 28, 2023, 04:33 PM IST

20 years of Allu Arjun: சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
20 years of Allu Arjun: சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

20 years of Allu Arjun: சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இளைஞர்களின் மத்தியில் இவருக்கு வரவேற்பு மிகவும் அதிகம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ghilli ReRelease Box office: ‘வேலு ஆட்டம் வெறித்தனம்’.. ரெக்கார்டு படைத்த கில்லி.. - பாக்ஸ் ஆபிஸ் வசூல் இங்கே தெரியுமா?

Vetrimaran: கோலிவுட்டிற்கு அடுத்த ஜாக்பாட்.. வெற்றிமாறனுடன் கூட்டு சேர்ந்த ஐசரி கணேஷ்.. - முழு விபரம் உள்ளே!

Yugendran on Vijay: அய்யய்யோ.. என்ன இப்படி சொல்லிட்டார்; விஜய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? - கோட் சீக்ரெட்டை உடைத்த யூகே!

19 வயசுல சினிமாவில் வந்து உச்சத்தில் பறக்கும் நடிகைகள்.. இவங்களோட சம்பளம் எல்லாம் இப்ப வேற லெவல்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்தனின் இரண்டாவது மகன் இந்த அல்லு அர்ஜுன். குழந்தை நட்சத்திரமாகத் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அல்லு அர்ஜுன், குழந்தைப் பருவத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார்.

அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் கே.ராகவேந்திராவின் நூறாவது திரைப்படம் தான் அந்த கங்கோத்ரி திரைப்படம்.

தெலுங்கு மொழியில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து நடிகர் அல்லு அர்ஜுன் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ஒரு சில படங்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களை தன்வசப்படுத்திய அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படம் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் தனக்கானவர்களாக மாற்றிக் கொண்டார்.

இவர் நடனத்திற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த அளவிற்கு தனித்துவமாக நடனம் ஆடக் கூடியவர் நடிகர் அல்லு அர்ஜுன்.

இவர் நடித்த புஷ்பா திரைப்படம் வெளியான அனைத்து இடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் தனது நெகிழ்ச்சியான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், திரையுலகத்திற்கு நான் வந்து இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். உண்மையாகவே நீங்கள் காட்டிய அன்பினால் தான் நான் இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறேன். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதேபோல் நான் திரைத் துறையில் இருக்கும் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் யார் என்பதை நீங்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கை கொண்டு தெரிந்து கொண்டேன். நான் இப்படி இருப்பதற்குக் காரணம் என் ரசிகர்கள் தான். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.