தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aalavandhan Re- Release: ரெடியா மக்களே…மீண்டும் திரையரங்குகளில் ஆளவந்தான்!

Aalavandhan Re- Release: ரெடியா மக்களே…மீண்டும் திரையரங்குகளில் ஆளவந்தான்!

Jan 25, 2023, 02:28 PM IST

கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே 400 கோடி ரூபாய் செலவில் 650 திரையரங்குகளில் வெளியான ஒரே திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான். 2001 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை என்று இந்த படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

Karthigai Deepam: ‘பக்கவாக காய் நகர்த்தும் ஐஸ்வர்யா.. கார்த்தியை தாரை வார்க்கும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

இந்திய வரலாற்றிலேயே அதிக அளவு பிரிண்ட் செய்யப்பட்ட திரைப்படமும் இந்த ஆளவந்தான் தான். உள்ளே கடவுள் வெளியே மிருகம் விளங்க முடியாத கவிதை நான் எனக் கமலஹாசனின் நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இந்த படத்தில் பல புதுமையான, பல புதிய தொழில்நுட்பங்கள் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி இருந்தார்.

தற்போது மீண்டும் இந்த ஆளவந்தான் திரைப்படம் 1000 திரையரங்குகளில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு ட்வீட்

இப்படம் வெளியான பொழுது பல புதிய தொழில்நுட்பங்களுடன் அனிமேஷன் காட்சிகளுடன் வெளியானது. தற்போது புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பின் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர். இதயம் பேசுகிறது என்ற இதழில் 1983 ஆம் ஆண்டு தாயம் என்ற பெயரில் தொடராக வெளிவந்த கதை தான் இந்த ஆளவந்தான்.

இந்த கதையை முதலில் இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்க வேண்டும் என்று கதை எழுதினார். பின்னர் இந்த கதையை இயக்குவதற்குத் தனது சிஷ்யன் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்து அசத்தியிருப்பார். மனநோயில் சிக்கிக் கொள்ளும் நந்துவின் கதாபாத்திரத்திற்காகத் தலையை மொட்டை அடித்து உடல் எடையை அதிகரித்து வலது கண் சிறியதாக்கி படத்திற்காகத் தன்னை செதுக்கிக் கொண்டார் கமல்ஹாசன்.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த ஆளவந்தான் திரைப்படம் வெளியானது. இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் ஆசியக் கண்டத்திலேயே முதல் முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமரா இந்த ஆளவந்தான் திரைப்படத்தில் தான் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி