தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: ‘தெர்மாகோல் போட்டு மூடி உள்ளோம்’ செல்லூர் ராஜுவை கலாய்த்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!

TN Assembly: ‘தெர்மாகோல் போட்டு மூடி உள்ளோம்’ செல்லூர் ராஜுவை கலாய்த்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Oct 09, 2023 11:13 AM IST

”24 மணி நேரமும் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வெளியே வராமல் வீட்டில் இருந்தே தண்ணீர் பிடிக்கும் திட்டத்தை முடித்துக் கொடுப்பாரா?” என செல்லூர் ராஜூ கேள்வி”

துரைமுருகன் - செல்லூர் ராஜூ - கே.,என்.நேரு
துரைமுருகன் - செல்லூர் ராஜூ - கே.,என்.நேரு

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் தொடங்கிய கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, “கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்க்கையை ஏற்று முல்லை பெரியாறு அணையில் இருந்து தங்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணியை விரைவுபடுத்தி 24 மணி நேரமும் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வெளியே வராமல் வீட்டில் இருந்தே தண்ணீர் பிடிக்கும் திட்டத்தை முடித்துக் கொடுப்பாரா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு, முல்லை பெரியாறை மூலமாக கொண்டு கம்பத்தில் இருந்து மதுஅரை மாநகராட்சிக்கு 180 எம்.எல்.டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதே தவிர கிணறு தோண்டும் பணிகளை வனத்துறை தரவில்லை. நாங்கள் வந்த பிறகு அனுமதி வாங்கினோம். இன்னும் 15 கி.மீ பணிகள்தான் பாக்கி உள்ளது. செல்லூர் ராஜூ கேட்டது போல் சுத்தமான தண்ணீரை நிச்சயம் வழங்குவோம் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”மாண்புமிகு செல்லூர் ராஜூ கேட்டது போல் தண்ணீ நிச்சயமா கொடுப்பாரு. அந்த தண்ணீ டேமில் காலியாகாமல் இருக்க தெர்மாகோலை போட்டு மூடி வைத்துள்ளோம் ஒன்னும் கவலைப்படாதீங்க...!” என்றார். துரைமுருகன் நையாண்டி பேச்சால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

IPL_Entry_Point