தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்ப செய்தி - ஒலி வடிவில் வெளியானது தொல்காப்பியம்

இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்ப செய்தி - ஒலி வடிவில் வெளியானது தொல்காப்பியம்

Priyadarshini R HT Tamil
Feb 27, 2023 11:11 AM IST

தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காறுகள், இலக்கணக் கூறுகள், வாழ்க்கை மரபுகள் ஆகியவை சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை. இதனால் அது தமிழின் முதல் நூல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை கடந்த 2021ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும். பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பியம் எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை உரையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் உரையை கேட்க வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக, தொல்காப்பியத்தின் சொல் மற்றும் பொருள் அதிகாரங்களின் செயலிகள் ஆண்ட்ராய்டு தளத்தில் வெளியிடப்படும்.

இந்த செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் வழிகாட்டுதலில், இளநிலை ஆய்வு வளமையர் கி.கண்ணன் வடிவமைத்துள்ளார். ஒலி வடி வில் வெளிவரும் செயலியால் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பார்வை குறைபாடு வர்கள் பயன்பெறுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பாகவே, இலக்கிய நூல்களைப் படிக்க பலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் வாசிப்பதற்கு நேரமின்மை மட்டுமின்றி, இலக்கியப் புத்தகங்களைத் தேடிப் பெற்று, அதிலுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு பொருள் புரிந்து படிப்பதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என்பதால், பண்டைகால இலக்கியங்களை அறிந்து கொள்வது பலர் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அதுபோன்ற சூழலில் தொல்காப்பிய உரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலி வடிவில் கேட்பதற்கான செயலியை செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியிருப்பது மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்ப செய்தியாக அமைந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்