தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  குண்டு வைக்க தெரியும்: கர்னல் பாண்டியன்; வழக்குப்போட தெரியும்: தமிழ்நாடு அரசு

குண்டு வைக்க தெரியும்: கர்னல் பாண்டியன்; வழக்குப்போட தெரியும்: தமிழ்நாடு அரசு

Kathiravan V HT Tamil
Feb 22, 2023 01:29 PM IST

கர்னல் பாண்டியனை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கர்னல் பாண்டியன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
கர்னல் பாண்டியன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்

ட்ரெண்டிங் செய்திகள்

கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒருவர் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்ணல் பாண்டியன் பேசிய பேச்சும் கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள்; வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள்; இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் வெடிகுண்டு வைப்போம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். இதனை பகிரங்கமாக தெரிவிக்கிறோம் என கூறினார்.

கர்னல் பாண்டியனின் இந்த பேச்சுக்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்போதும் ஆமாம் நாங்கள் குண்டு வைப்போம். மிரட்டல்தான் விடுக்கிறோம். சட்டம் ஒழும்க்கு கெட்டுத்தான் போகும் என மீண்டும் தனது மிரட்டல் பேச்சை தொடர்ந்தார் பாண்டியன்.

தமிழகத்தில் பயங்கரவாதத்தை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்னையை விளைவிப்போம் என்று பேசிய கர்னல் பாண்டியனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது

இதன் எதிரொலியாக வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கர்னல் பாண்டியனை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்