தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழகத்தில் கொட்டப்படும் பிற மாநில மருத்துவ கழிவுகள்-என்ன சொல்கிறது நீதிமன்றம்!

தமிழகத்தில் கொட்டப்படும் பிற மாநில மருத்துவ கழிவுகள்-என்ன சொல்கிறது நீதிமன்றம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 17, 2023 01:33 PM IST

கடந்த 2022- 2023 ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

கோப்புப்படம்
கோப்புப்படம் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

தென்காசியை சேர்ந்த சிதம்பரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் , நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018 ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யபட்டது. அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கபட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் .

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் செந்தில் நாதன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் . அதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்பு படி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் கண்காணிப்பு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக வருவதற்கு கோவை மாவட்டத்தில் 14 வழிகளும், கன்னியாகுமரிக்கு 15 வழிகளும், தேனி மாவட்டம் வழியாக வருவதற்கு மூன்று வழி தடங்களும் , தென்காசி மாவட்டம் வழியாக. வருவதற்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளது.

எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழிதடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவது தொடர்பாக கோவை, கன்னியாகுமரி , தேனி , திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் எந்த விதமான வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 2022- 2023 ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

எனவே தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் தான் தொடர்ந்து கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

தென்காசி மருத்துவக் கழிவுகளை கொட்டும் இடமாக மாறிவருகிறது. மேலும் , கண்காணிப்பு குழு நியமித்து தொடர்ந்து மருத்துவ கழிவுகளை கொட்டுவது தொடர்பாக தொடர்ந்து எல் லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என தொடர்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்ப பட்டு வருகிறது.என பதில் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து , நீதிபதிகள் தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்