தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dindigul;''love With A 22-year-old; A 38-year-old Woman Caused A Clash In The City.

Dindigul;'22 வயது இளைஞருடன் காதல்; 38 வயது பெண்ணால் ஊரே மோதல்'

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 10, 2023 02:09 PM IST

சூரிய பிரசாந்த் கடந்த சில நாட்களாக சுகன்யாவுடன் பழகுவதை தவிர்த்து விலகி பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருந்து வந்தார்

மோதலில் ஈடுபட்டவர்கள்
மோதலில் ஈடுபட்டவர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மெய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லச்சாமி. இவரது மகன் சூரியபிரசாந்த் ( 22 ). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த  திருமணமான சுகன்யா (38) என்பவருடன் தகாத உறவிலிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூரிய பிரசாத் கடந்த சில நாட்களாக சுகன்யாவுடன் பழகுவதை தவிர்த்து விலகி பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருந்து வந்தார்

இந்த நிலையில் சுகன்யா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி சூரிய பிரசாந்த்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுகன்யா தனது உறவினர்கள் சிலரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். மதுரையில் உள்ள தனது உறவினர்களை நேற்று இரவு வரவழைத்துள்ளார். இதையடுத்து அவர் சூரியபிரசாந்த் குடும்பத்தினரிடம் தகராறு ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் நத்தம் போலீசார் நேற்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுகன்யாவின் உறவினர்கள் சூரிய பிரசாந்த் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் அரிவாள், இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது

இந்த மோதலில் படுகாயம் அடைந்த சூரிய பிரசாந்த், அவரது தங்கை விஜயசாந்தி (18), அவரது பாட்டி கருப்பாயி (58), உறவினர் சுந்தரபாண்டி (42 )ஆகியோர் அரிவாள் வெட்டு காயத்துடன் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமாயி, சுந்தர் சித்ரா, முருகன் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 6 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . '22 வயது இளைஞருடன் 38 வயது பெண் காதலில் ஈடுபட்டதால் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பதற்றதை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்