‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு’ இந்தியாவுக்கு இலங்கை மனதார நன்றி!
Sri Lanka's profound gratitude to Prime Minister Narendra Modi: ‘இலங்கை அதிபர், அரசு மற்றும் இலங்கை குடிமக்கள் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு, ஜெய்சங்கர் மற்றும் இந்திய மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ -இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கையின் நன்றியை தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
"நாங்கள் எங்களின் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற மனிதாபிமான இறக்குமதிக்காக இந்தியா வழங்கிய 4 பில்லியன் டாலர் மதிப்பிலான மகத்தான ஆதரவின் அளவு மிக அதிகமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஓரளவு மீட்டெடுக்க முடிந்தது," என்று சப்ரி இன்று இலங்கையில் நடந்த மத்திய அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடனான செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்காக, இலங்கை அதிபர், அரசு மற்றும் இலங்கை குடிமக்கள் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு, ஜெய்சங்கர் மற்றும் இந்திய மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடலில் இலங்கை ஒரு தீர்க்கமான தருணத்தில் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனான மீட்சியின் பாதையில் தமது பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு, இலங்கைக்கு கடனாளிகளின் உத்தரவாதம் தேவை என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தியா மீண்டும் இலங்கைக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது என்றார். "இலங்கைக்கு ஆதரவாக மீண்டும் ஒருமுறை இந்தியா தனது கையை நீட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உறுதிமொழிகளை தெரிவிப்பதன் மூலம் நமது கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உத்தியோகபூர்வமாக ஆதரவளித்த முதல் நாடு இதுவாகும். இந்தியா அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி எங்களுடன் ஒற்றுமையை அறிவித்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சப்ரி செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜெய்சங்கர் முன்னிலையில் இருதரப்பு ஒத்துழைப்புத் துறைகளில் பல முக்கிய முயற்சிகள் முடிவடைந்ததாக அவர் கூறினார். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இந்திய மானியத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் இதில் அடங்கும்.
"இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகள், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா உள்ளது, நாட்டின் முன்னேற்றம் பிராந்தியத்திற்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று சப்ரி கூறினார்.
இந்தியாவின் பொருளாதார வெற்றியையும், சர்வதேசப் போற்றுதலையும் மிகுந்த மரியாதையுடன் பார்த்து வருகிறோம், என்றார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது ஜனவரி 19-20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜெய்சங்கர் வியாழக்கிழமை சப்ரியுடன் உள்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
"வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிற அமைச்சர் சகாக்களுடன் கொழும்பில் சந்திப்பு நடைபெற்றதாகவும் உள்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்காக முதலீட்டு வரங்களை அதிகரிப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் அவர் தெரிவித்தார்.
டாபிக்ஸ்