Delhi Murder :தொடரும் கொடூர கொலைகள் .. கணவனை துண்டு போட்ட மனைவி.. மகனும் உடந்தை!
தில்லியில் கணவரை கொன்று 10 துண்டாக வெட்டி தாய், மகன் சேர்ந்து வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது
தில்லி : பாண்டவ் நகரில் தனது மகன் உதவியுடன் கணவரை கொலை செய்த பெண் உடலை 10 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அருகில் உள்ள நிலப் பகுதிகளில் அப்புறப்படுத்தி உள்ளார். இது அப்பகுதியி உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.இதன் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தில்லி பாண்டவ் நகரில் வசித்து வந்தவர் அஞ்சன் தாஸ்.இவரின் மனைவி பூனம்.இவர்களுக்கு தீபக் என்கிற மகன் உள்ளான். அஞ்சன் தாஸ் வேறுரொருவருடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பூனம் மற்றும் அவரது மகன் தீபக் தூக்க மாத்திரைகள் கொடுத்து அஞ்சன் தாஸை கொன்றுள்ளனர்.
பின்னர் உடலை 10 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துள்ளனர்.பாண்டவ் நகர் மற்றும் கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் தினமும் சில பாகங்களை வீசி உடலை அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளனர். பாண்டவ் நகரில் உள்ள ராம்லீலா மைதானம் அருகேயும் கணவரின் உடலை வீசியுள்ளனர்.
சமீபத்தில் தில்லியில் அஃப்தாப் பூனாவாலா தனது காதலி ஷ்ரதா வால்கரை கொன்று , உடலை 33 துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. பின்னர் உத்தரபிரதேசத்தில் காதலியை முன்னாள் காதலன் ஆறு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது தில்லியில் கணவரை கொன்று 10 துண்டாக வெட்டி தாய், மகன் சேர்ந்து வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்று தொடர் நடைபெறும் கொடூர கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்