தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Arvind Kejriwal: 2 புதிய அமைச்சர்களின் பெயர்களை பரிந்துரைத்த முதல்வர் கெஜரிவால்

Arvind Kejriwal: 2 புதிய அமைச்சர்களின் பெயர்களை பரிந்துரைத்த முதல்வர் கெஜரிவால்

Manigandan K T HT Tamil
Mar 01, 2023 12:18 PM IST

New Delhi: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது பதவிகளை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது பதவிகளை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனர்.

அவர்களின் ராஜிநாமாவை முதல்வர் அரவிந்த் கெஜரிவால் ஏற்றுக் கொண்டார்.

மதுபான விற்பனை தொடர்பான கலால் வரிக் கொள்கையில் ஊழல் செய்ததாக மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியின் அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் டெல்லியின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் வெற்றிகரமான மாற்றத்துக்கு வழிவகுத்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து வருகிறது.

மணீஷ் சிசோடியா கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

இந்நிலையில் தான் சவுரப் பரத்வாஜ் மற்றும் ஆதிஷி இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்