தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Serial:ஐயப்பன் கோயிலாக மாறிய பார்ட்டி ஹால்; ட்விஸ்டோ ட்விஸ்ட்!

Karthigai Deepam Serial:ஐயப்பன் கோயிலாக மாறிய பார்ட்டி ஹால்; ட்விஸ்டோ ட்விஸ்ட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2023 02:10 PM IST

தீபாவிடம் நான் மேல போய் பார்ப்பேன், நீ சொன்ன மாதிரி இல்லனா.. நடக்கறதே வேற..என்று சொல்லி மேலே போய் பார்க்க, அங்கு அவருக்கு காத்திருந்து அதிர்ச்சி. காரணம், அங்கு ஐயப்ப பூஜையில் நட்சத்திரா புடவையுடன் பக்திமயமாக இருந்தாள்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களிடம் பிரபலமாகி வரும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களாக வரும் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திகேயனும், தீபா கதாபாத்திரத்தில் நடிகை ஆர்த்திகாவும் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளை டிவியில் ஒளிப்பரப்பபடுவதற்கு முன்னரே எக்ஸ்க்ளுசிவாக தரும் முயற்சிதான் இந்த கட்டுரை!

நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா, அபிராமியிடம் நட்சத்திராவை பற்றி போனில் சொல்லி, நீங்கள் உடனே வந்தால் அவளை பற்றி தெரிந்து கொள்ளலாம் என சொல்கிறாள். அதைக்கேட்ட அபிராமி ஃபோனை கட் செய்ய ஐஸ்வர்யா என்னவென்று கேட்கிறாள். விஷயத்தை கேட்ட அவள் அபிராமியிடம் தீபாவை பற்றி தப்பாக சொல்ல, உடனே அபிராமி நம்ம நேர்ல போய் பார்த்து எதுவா இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம் என்று புறப்படுகிறாள்.

 

அபிராமி
அபிராமி

தீபா சொன்ன இடத்திற்கு அபிராமி அவசரமாக வந்து நிற்க, மேலே நட்சத்திரா பார்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது போல காட்சி நகர்கிறது. வீட்டின் வாசலில் நிற்கும் தீபாவை அபிராமி என்னவென்று கேட்க, அதற்கு தீபா, இந்த மாதிரி தான் நட்சத்திராவை நிறைய இடங்களில் பார்த்ததாகவும், அவள் தவறாக இருப்பதாகவும், தற்போது கூட தானே அவளை ஃபாலோ செய்து வந்ததாகவும் சொல்கிறாள். மேலும் அவள் பார்ட்டியில்தான் இருக்கிறாள் என்று தீபா சொன்னதுதான் மிச்சம் அபிராமி டென்ஷனின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

அடுத்து தீபாவிடம் நான் மேலே போய் பார்ப்பேன், நீ சொன்ன மாதிரி இல்லனா.. நடக்கறதே வேற என்று சொல்லி மேலே போய் பார்க்க அங்கு அவருக்கு காத்திருந்து அதிர்ச்சி.

காரணம், அங்கு ஐயப்ப பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்க நட்சத்திரா புடவையுடன் பக்தியுடன் இருந்தாள். அதை பார்த்து அபிராமி என்னவென்று கேட்க ஒன்னு இல்ல அத்தை, ஃப்ரண்டோட அண்ணன் ஐயப்ப பூஜைக்கு போறாப்ல அதுக்காக தான் என்று சொல்கிறாள்.

மேலும் நீங்க என்ன விஷயமா வந்தீங்க என கேட்க, அபிராமி இல்ல சும்மாதான் உன் காரை பார்த்து விட்டு வந்தேன். நீ பூஜையை பாரு என்று சொல்லி கீழே வந்து தீபாவை கண்டபடி திட்டுகிறாள். என் மருமகளை வந்து தப்பா சொல்றதுக்கு நீ யாரு… நீ கார்த்தியை கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறாயா… என்று தீபாவை திட்டி விட்டு போகிறாள்.

 

தீபா
தீபா

மேலே இருந்து இதை பார்த்த நட்சத்திரா நிம்மதி பெருமூச்சு விட அப்போது சிவா வந்து நல்ல வேளை, வேலைக்காரன் சொன்னதுனால தப்பிச்சேன், இந்நேரம் நீ மாட்டியிருப்ப, தயவு செய்து கல்யாணம் வரைக்கும் நீ கம்முனு இரு என்று திட்டி விட்டுப் போகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பார்க்கலாம்.

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்