Yashika Tattoo:அந்த இடத்தில் டாட்டூ போட்ட யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் புதிய டாட்டூ போட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யாஷிகா ஆனந்த், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3.9 மில்லியன் ரசிகர்களை பின் தொடர்கின்றனர். அவ்வப்போது யாஷிகா ஆனந்த் பகிரும் சுற்றுலா & போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
கடந்த ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி உயிரிழந்தார்.
கடுமையாகக் காயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிய யாஷிகா ஆனந்த், பழைய படி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா சமூக வலைதளங்ளில் எப்போதும் படு கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.
அந்த வகையில் இவர் தற்போது முதுகில் பச்சைக் குத்தி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இந்த இடத்தில் கூட பச்சைக் குத்துவார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் அது மிகவும் அழகாக இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.
இவர் கடைசியாக கடமையை செய் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது, சைத்ரா என்ற படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்து உள்ளார்.
டாபிக்ஸ்