Varisu: தீ தளபதி… 50 ஆவது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு
ஒடிடியில் வெளியான பின்னரும் 25 தியேட்டர்களில் 50 ஆவது நாளை வாரிசு படம் கொண்டாடுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான படம், வாரிசு. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியானது.
ட்ரெண்டிங் செய்திகள்
தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொது மக்களின் வரவேற்புடனும் சேர்ந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடி மிகப்பெரிய சாதனையையும் செய்தது.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வாரிசு படம் வெளியாகி, குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படமாக அங்கேயும் கூட தனது சாதனையை தொடர்கிறது வாரிசு. அதே சமயம் ஒடிடியில் வெளியானாலும் கூட வாரிசு திரைப்படம் தமிழகமெங்கும் பல திரையரங்குகளில் தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று ( மார்ச் 1 ) வெற்றிகரமாக 50 ஆவது நாளில் அடியெடுத்து வைத்து உள்ளது வாரிசு திரைப்படம். தமிழகமெங்கும் 25 திரையரங்குகளில் 50 ஆவது நாளை தொட்டுள்ளது வாரிசு. இதையடுத்து திரையரங்கு நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்களால் வாரிசு 50 ஆவது நாள் கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்