Rashmika: ஐந்து நகரங்களில் 5 சொகுசு வீடுகள் வைத்து இருக்கிறாரா ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா ஐந்து சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானவார் ராஷ்மிகா. இவர் தற்போது மிகவும் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். ராஷ்மிகா ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் நடித்து விடுகிறார். இவர் கடைசியாக விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து இருந்தார். இதனால் அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல்கள் சொல்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, ஹைதராபாத், கோவா, மும்பை, கூர்க் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் ராஷ்மிகா விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது போன்ற செய்திகளை பார்த்த ராஷ்மிகா ரியாக்ட் செய்துள்ளார். இதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வதந்திகளை யார் உருவாக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அனைத்தும் உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தனக்கு எதிராக வரும் வதந்திகளை மறுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகா சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவது தெரிந்ததே. இதற்கு ராஷ்மிகாவும் கடுமையாக பதிலளித்துள்ளார்.
மிஷன் மஜ்னு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராஷ்மிகா கூறிய சில கருத்துக்கள் மக்களிடையே பல விவாதங்களை கிளப்பியுள்ளது. காதல் பாடல்கள் தயாரிப்பதில் பாலிவுட் சிறந்து விளங்குவதாக ராஷ்மிகா கூறியதால், தென்னிந்தியாவில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கன்னடத்தில் இருந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்கும் போது கன்னடப் படங்களை குறைத்து பேசிய நீங்கள் இப்போது இந்தி படங்களில் நடித்து தென் இண்டஸ்ட்ரியையே கேவலப்படுத்துகிறீர்கள். இது சரியல்ல என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்