Rashmika Mandanna: “ ‘புஷ்பா 2’ கதையே தெரியாது.. ஸ்ரீவள்ளி 2.0 - வ பாப்பீங்க” - பேட்டியில் குண்டை போட்ட ராஷ்!
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2: தி ரூல் படத்தில் மீண்டும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் குறித்து அவர் பேசி இருக்கிறார்.

Rashmika Mandanna plays Srivalli in Pushpa The Rule.
கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா:தி ரைஸ் திரைப்படம் பெரிய கவனத்தை ஈர்த்தது.இதன் இரண்டாம் பாகமான புஷ்பா: தி ரூல் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது.
இதில் தான் ஏற்று நடித்திருக்கும் வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது.
படத்தின் கதை எனக்கு தெரியாது
அந்த கதாபாத்திரத்தின் தன்மை தெரியாத காரணத்தால், எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்ன மாதிரியான உலகத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பது குறித்து எனக்குத் தெரியாது.