Priya Bhavani Shankar: ‘பணத்திற்காக அதை செய்தேன்’ - பிரியா பவானி ஷங்கர் பளிச்!
பிரியா பவானி ஷங்கர் தான் பணத்திற்காக நடிக்க வந்தேன் என கூறியுள்ளார்.
சின்னதிரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்து ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் பிரியா பவானி ஷங்கர். பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் போல் இருப்பதால் இவரை எளிதாக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர் திரைத்துறையில் மேயாத மான் படம் மூலம் நுழைந்தார். இதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, ஓ மணப்பெண்ணே, மான்ஸ்டர், யானை, குருதி ஆட்டம் என பல படங்களில் நடித்துவிட்டார். பிரியா பவானி சங்கர் சில படங்களில் குடும்ப பாங்காக வந்ததால் அதே மாதிரியான கதைகளிலேயே அவரை பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் கைவசம் தற்போது பொம்மை, அகிலன், ருத்ரன், பத்து தல, டிமான்ட்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் தான் பணத்திற்காகத் தான் திரைத்துறையில் நடிக்க வந்தேன் என சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறினார்.
அவர் பேசுகையில், “ சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. படங்களில் நடித்தால் பணம் வருகிறது என சொன்னதால் நான் பணத்திற்காக நடித்தேன்.
மேலும் எதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து அந்த கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன்.
சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரையுலகில் தங்களை நிரூபித்துக் கொள்ள நிறைய கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நான் இன்னும் அதிகமாக இந்த துறையில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
வளர்ந்து வரும் பிரியா பவானி ஷங்கர் தற்போது, 'இந்தியன்-2' படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் தெலுங்கில், கல்யாணம் கமனீயம் என்ற படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். சந்தோஷ் சோமன் நாயகனாக நடித்துள்ளஇந்தப் படம் 14 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.
நடிகை பிரியா பவானி ஷங்கர் கடந்த ஆண்டு புது வீடு வாங்கி தனது காதலருடன் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்