Dindigul: வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த பெண்.. உதவிய காவலருக்கு குவியும் பாராட்டு!
வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய பெண் காவலரின் செயல் சமூகவலைதளங்களில் பாரட்டைப் பெற்று வருகிறது
திண்டுக்கல் போக்குவரத்து காவல் துறையில் காவலராக பேபி என்பவர் பணி செய்து வருகிறார். இவர் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேற்குரத வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் தள்ளாடியபடி நடந்து சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி திடீரென மயங்கி விழுந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைக் கண்ட பெண் காவலர் பேபி உடனடியாக அங்கு இருந்தவர்கள் உதவியுடன் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலுதவி அளித்ததோடு அவருக்கு ஆடைகள் வாங்கி அணிவித்து அவரை சுத்தம் செய்து தண்ணீர் கொடுத்து உதவி செய்தார். காவலர் பேபியின் இந்த செயல் சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
டாபிக்ஸ்