தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nawazuddin:நீதிமன்றத்தில் மனைவி;குழந்தைக்கு மரபணுசோதனை சர்ச்சையில் பேட்ட நடிகர்!

Nawazuddin:நீதிமன்றத்தில் மனைவி;குழந்தைக்கு மரபணுசோதனை சர்ச்சையில் பேட்ட நடிகர்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 12, 2023 11:38 AM IST

பிரபல நடிகர் நவாசுதீனின் மனைவி தன்னுடைய குழந்தையை ஏற்க மறுப்பதால் அவர் ஏற்கமறுப்பதால் குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றம் ஏறியிருக்கிறார்

நவாசுதீனின் மனைவி
நவாசுதீனின் மனைவி

ட்ரெண்டிங் செய்திகள்

பொதுவாக குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வருவது மிகவும் இயல்பான ஒன்றே. அதற்கு நவாசுதீனும் விதிவிலக்கல்ல. ஆம் சமீபகாலமாக பாலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுணாக இருப்பது நவாசுதீனின் கணவன் மனைவி சண்டைதான். நவாசுதீனின் தாயார் மெஹ்ரூனிஷா மருமகளான ஆலியா சித்திக் மீது இந்த மாத தொடக்கத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஆலியா தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் தன்னை கடுமையாக தாக்கினார் என்று குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஆலியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை, மாறாக விசாரணை மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. சொத்து தகராறில் இந்தப்பிரச்சினை எழுந்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து ஆலியா வழக்கறிஞர் ஆலியாவை வீட்டை விட்டு வெளியே விடாமல் நவாசுதீன் ஆட்கள் தடுத்துவருவதாகவும், 7 நாட்களாக அவருக்கு சாப்பாடு கொடுக்கமால், பாத்ரூம் போக அனுமதிக்காமல் கொடுமை படுத்துவதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஆலியா சித்திக் தனக்கும் நவாசுதீனுக்கும் பிறந்த இரண்டாவது குழந்தையை அவர் ஏற்க மறுப்பதாகவும், ஆகையால் தன்னுடைய குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்துடன் நவாசுதீனுக்கும் தனக்கும் இடையே நிலவும் பிரச்சினை முடிவுக்கு வந்ததும், நவாசுதீனை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ஆலியாவின் வழக்கறிஞர் குழந்தைக்கு இதே பரிசோதனையை செய்ய வேண்டும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். பின்னர் அந்த கோரிக்கை மனு திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்