தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காதல் தோல்வி.. சாக்லேட் பாய்ஸ் வேண்டாம் - நடிகை ஆத்மிகா ஓப்பன் டாக்!

காதல் தோல்வி.. சாக்லேட் பாய்ஸ் வேண்டாம் - நடிகை ஆத்மிகா ஓப்பன் டாக்!

Karthikeyan S HT Tamil
Mar 12, 2023 01:58 PM IST

Actress Aathmika: காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன் என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.

நடிகை ஆத்மிகா
நடிகை ஆத்மிகா

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஆத்மிகா நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாறன் இயக்கத்தில் சித்து குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஏற்கெனவே 'கண்ணை நம்பாதே' டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகை ஆத்மிகா கூறியது இதோ..காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் பண்ணவில்லை. ஆனால், என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார். அதற்காக தற்போது மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு ரக்கட் பாய்ஸூம் வேண்டாம் சாக்லேட் பாய்ஸூம் வேண்டாம். சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் போதும். பணமா புகழா இதில் எது முக்கியம் என்றால் பணம்தான் முக்கியம் என்பேன். ஏனெனில் அதுதான் எதார்த்தம்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்