தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: செக் வைத்த சிவா கீழே சிக்கிய பத்திரிகை.. வசமாக சிக்கிய தீபா?

Karthigai Deepam: செக் வைத்த சிவா கீழே சிக்கிய பத்திரிகை.. வசமாக சிக்கிய தீபா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 22, 2023 02:36 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்; இந்த சீரியலில் இன்று நடக்கும் நிகழ்வுகளை டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னரே எக்ஸ்க்ளூசிவாக தரும் முயற்சி இது

கார்த்தி
கார்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

இதை அறிந்த நட்சத்திரா நிம்மதி அடைய, சிவா உன்னைப் பற்றி சொல்ல கொஞ்ச நேரம் ஆகாது என எச்சரித்து விட்டு செல்கிறான். அடுத்து நட்சத்திரா ஐஸ்வர்யாவை பார்த்து மனதுக்குள் இவ மட்டும் இல்லன்னா இந்நேரம் இந்த கல்யாணம் நடந்து முடிந்திருக்கும் என நினைக்க, பதிலுக்கு ஐஸ்வர்யா மனதுக்குள் ஒரு காலமும் நீ கார்த்தியை கல்யாணம் பண்ண முடியாது என சொல்கிறாள். 

அதன் பின்னர் கார்த்தி தூங்கிய பிறகு முழிக்கும் தீபா, எப்படியாவது கீழே இருந்து பெயர் மாற்றி எழுதிய பத்திரிகையை எடுக்க வேண்டும் என கீழே போகிறாள்; அப்போது அங்கு ஐஸ்வர்யா வந்துவிட தீபா ஷோபாவின் பின்புறம் மறைந்து கொள்கிறாள்.

இனிமேலும் இங்கே இருக்க கூடாது என தப்பித்து மேலே வந்த தீபாவை பார்த்த ஐஸ்வர்யா கத்தி சத்தம் போட.. பின்னர் தேடி பார்த்தால் தீபாவை அங்கு காணோம்.

மேலே வந்த தீபாவிடம் கார்த்தி எதுக்கு கீழே போன என கேட்க, தீபா தண்ணீர் குடிக்க போனதாக சொல்லி சமாளிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்