Karthi: இது அல்லவா மனசு… உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு கார்த்தி ஆறுதல்
நடிகர் கார்த்தி உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சென்னை மாவட்டம் திருவான்மியூரில் வசித்து வருபவர் வினோத். இவர் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் ஆவார். இதனிடையே நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரான வினோத் (29) மாரடைப்பு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த சமயத்தில் நடிகர் கார்த்தி படத்தின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். கார்த்தி தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் நிலையில் சென்னை திரும்பி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி சென்னை திரும்பியதும் உடனே மாரடைப்பில் உயிரிழந்த தன் ரசிகர் வினோத் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
அதுமட்டுமின்றி வினோத்தின் குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி பண உதவி செய்தாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவரை போன்று அனைத்து நடிகர்களும் தங்களின் ரசிகர்களை மதிக்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.
நடிகர் கார்த்தி நடிப்பது மட்டுமில்லாமல் உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி இயற்கை விவசாயத்தில் சாதனை புரிபவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வறண்ட நிலத்தை குத்தகை எடுத்து இயற்கை விவசாயம் செய்து சாதித்த கிராமத்து பெண்களை அழைத்து வந்து விருதுகள் வழங்கி பாரட்டினார். அப்போது விவசாயிகளுக்கு உதவ அனைவரும் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அவர் பேசுகையில், “உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்