Bigg Boss: உண்மையாக இருந்தா ஜெயிக்க முடியாது- பிக் பாஸை விளாசிய காஜல் பசுபதி
பிக் பாஸில் உண்மையாக இருந்தா ஜெயிக்க முடியாது என காஜல் பசுபதி தெரிவித்து உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் ( ஜனவரி 22) நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ராபர்ட் மாஸ்டர், அசீம், ஏடிகே, ராமசாமி, தனலட்சுமி, அமுதவாணன், ஜனனி, விஜே கதிரவன், விஜே மஹேஸ்வரி, சாந்தி, மணிகண்டன், ரக்ஷிதா, ஆயிஷா, விக்ரமன், ஷிவின், குயின்சி, நிவாஷினி மற்றும் மைனா நந்தினி என 21 பேர் கலந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கான பட்டியலில் விக்ரமன், அசீம், ஷிவின் 3 பேரும் இடம் பிடித்தனர். இவர்களின் மக்களின் மனதை வென்று அதிக ஓட்டுகள் வாங்கியவர் என்ற அடிப்படையில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் 2 ஆவது இடம் பிடித்தார். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை காஜல் பசுபதி, அசீம் வெற்றியை கடுமையாக சாடி உள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்கையுமே நல்லவங்களா உண்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சமூகம் ” என குறிப்பிட்டு உள்ளார். காஜல் பசுபதி ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், ஆமாம் நீங்க சொல்வது சரி தான். அதுவும் பிக் பாஸில் அது சரியாக இருக்கிறது என கூறி கமெண்ட்களை தெரிக்கவிட்டு உள்ளனர்.
இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஆறு பேரில் கதிரவன் முதல் நபராக 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் வெளியேறினார். இரண்டாவது முறையாக வைக்கப்பட்ட பணப்பெட்டியான 11 லட்சத்து 75000 ஆயிரம் ரூபாயுடன் அமுதவாணன் வெளியேறினார். மைனா நந்தினி எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார் என்பட்
டாபிக்ஸ்