Manjummel Boys: "ஒத்த ரூபாய் கூட தரல" மஞ்சும்மல் பாய்ஸ் பைனாஸ்சியர் குமறல் - தயாரிப்பாளர்கள் மீது வழக்கு
மலையாள சூப்பர் ஹிட்டான மஞ்சுமெல் பாய்ஸ் படம், பிற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோடிகளுக்கு மேல் வசூலித்த மலையாள படம் என்ற பெருமையும் பெற்றது. இந்த படத்தின் பைனான்ஸியரை ஏமாற்றியதாக படத்தின் தயாரிப்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதுடன் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை பெற்ற படமாக மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்கள், அங்கிருக்கும் குணா குகையில் தவறி விழும் தனது நண்பனை எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தின் க்ளைமாக்ஸில் குணா படத்தில் வரும் பாடல் இடம்பிடித்திருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாமல் புதுமுக நடிகர்கர்கள் நடித்திருந்த இந்த படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் படத்தை வெகுவாக கொண்டாடினார்கள். கோலிவுட் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினார்கள்.
தயாரிப்பாளர்கள் மோசடி
இதையடுத்து மஞ்சுமெல் பாய்ஸ்் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், "மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு அவர் பணத்தை சொன்னபடி தரவில்லை. மேலும், படத்தின் தயாரிப்புக்காக கொடுத்த ரூ.7 கோடியை கூட திருப்ப தரவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்
பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கபட்டது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியுள்ளார். படத்தின் கதைக்களம் தமிழ்நாடு என்பதால் பெரும்பாலான காட்சிகள் தமிழில் இடம்பிடித்திருக்கும்.
இந்த படம் பெற்ற வரவேற்ப்பை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.
மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ்
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெற்று இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி தேதியை ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் தற்போது வரை அறிவிக்க வில்லை. ஆனால், இந்தப்படம் மே 3 ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்