Vanitha Vijaykumar: எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் பீட்டர் பால்-நடிகை வனிதா உருக்கம்!
Vanitha Vijaykumar: நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
நடிகை வனிதாவின் 3 வது கணவர் பீட்டல் பால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இரங்கல் தெரிவித்தார்.அதில்,"என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்."
ட்ரெண்டிங் செய்திகள்
"முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், எல்லோருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்."
"நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்க இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்" என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பின்னர் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை எனது கணவர் பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டார் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் பீட்டர் பால் மது போதைக்கு அடிமையானவர், பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கிறது எனப் பல குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் மூலமாக எலிசபெத் தெரிவித்திருந்தார். அப்போது நடைபெற்ற வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணம் பல்வேறு சர்ச்சைகளைத் தொடங்கி வைத்தன.
அப்போது வனிதா விஜயகுமாரை விமர்சித்த கஸ்தூரி லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டவருக்கு அதிரடியான பதிலடியைக் கொடுத்திருந்தார் வனிதா. திருமணம் முடிந்தவுடன் குடும்பத்தோடு கோவா சென்று இருந்த தம்பதிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தினால் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தகவல்கள் வெளியாகின.
அதன் பின்னர் கண்ணீர் மல்க வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், " என்னையும் எனது மகள்களையும் கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆதரவான ஆண் தோழரைத் தேடி வந்தேன். இதனால் தான் நான் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு இதயத்தில் கோளாறு இருந்தது அதன் காரணமாக ஓரிருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலக் குறைவை அதிகரித்தது. அவர் குணமடைய சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்தது. குடிபோதையின் காரணமாக அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவார். மக்களிடம் பணம் கேட்பார். ஒரு வாரம் முழுக்க மது மட்டுமே அருந்திக் கொண்டிருந்தார்.
சரியாக உணவு கூட எடுத்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறினார். பல மணி நேரம் வீட்டிற்கு வராத அவரை ஒரு உதவியாளர் வீட்டிற்கு அழைத்து வந்தார். நான் அவரை எவ்வளவு நன்றாகக் கவனித்துக் கொண்டேன் என அவருக்குத் தெரியும். ஆனால் அவருக்கு என்னை விட மதுவின் மீது நேசம் அதிகம் எனத் தெரிந்து கொண்டேன்.
கோவா சென்று வந்த பிறகு அவரது சகோதரர் காலமானதாக அவருக்கு அழைப்பு வந்தது. அவர் வீட்டிற்குச் செல்வதற்காகச் செலவுக்கு நான் பணம் கொடுத்தேன். வீட்டிற்குச் சென்றவர் அப்படியே போய்விட்டார். அவரும் என்னை அழைக்கவில்லை. எனது அழைப்பையும் அவர் எடுக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்